May
07
கண்ணீரின் இடையில்பிறக்கிறது காதல்;முட்களின் மத்தியில்பூக்கிறது ரோஜா! விழியோடு ஒட்டி உறவாடி உயிரோடுபேசியிருந்தவனை கலைத்துப்போட்டதுஅவரின் குரல்! என்ன கேட்டார்ஏது பேசினார் என அறியா நிலையில்என்ன கேட்டீங்கஎனத் தடுமாறிஅசடு வழிய கேட்கஅவள் இதழ் சிந்தியபுன்னகை காதோடுபேசியது கேலி மொழி! அடுத்து என்ன படிப்பதாய் உத்தேசம்?மதிப்பெண் பார்த்துதான் முடிவு.அவளும் அப்படித்தான் சொல்லுறாநல்லா எழுதியிருக்கியா?ம் நல்லா எழுதி இருக்கேன். அறிந்த மொழியெல்லாம்அறிவிலிருந்து அவசரமாய் அழிந்திடஅரைகுறையாய் வந்தன வார்த்தைகள் மட்டும்; என்ன புத்தகம் படிப்பாய்?எதுவானாலும் சரி‘ப்ரியா’ அந்த புத்தகம் முடித்துவிட்டாயா?ம் முடிச்சுட்டேன்ப்பாசரி அதை கொண்டுவந்து [...]
கவிதை,காதல்,தொடர்,பிப்ரவரி,மற்றொரு மாலையில்...
Feb
21
உன் கூந்தல்உதிர் பூவின்இதழொன்று கை சேர்கிறது!இருதயத்தில் மெல்லவசந்தம் மலர்கிறது! நண்பர்களுடன் நீச்சல்மிதிவண்டி பயணம்பிள்ளைகளின் கூக்குரலில்லாமல்தனியே வாடும் பள்ளிமைதானத்துடன் பேச்சு;நீ சாய்ந்து அமர்ந்ததிண்டினைதீண்டுதலெனநகர்கிறது;விடுமுறை நாட்கள்! வீடு கடக்கையில்ஆத்தோரம் தண்ணி அள்ளுகையில்எனசந்திக்கும் சமயங்களில்விழியால் உயிர் வருடிக் கொள்கிறோம்இறகின் பரிவோடு! ஊர் சுற்றிகலைத்து திரும்பும் எனை வரவேற்ககாத்திருக்கும்;விடுமுறையில்ஏதாவது உருப்படியாசெய்யேன் எனும் அப்பாவின்குரல்! அதைஒரு காதில் வாங்கிமறு காதில் ஒழுகிட விடுதல்நிகழும்தினம் தினம்! அப்படியான ஒருநாளில்உன் தந்தை பெயர் சொல்லிஅவரிடம் புத்தகம்வாங்கி படி;அவரிடம் சொல்லி வந்திருக்கிறேன்என்கிறார் எனதருமை அப்பா! இதை முன்னமேசொல்லியிருக்கலாமே எனமனதுள் [...]
கவிதை,காதல்,தொடர்,பிப்ரவரி,மற்றொரு மாலையில்...
Feb
16
காதல் கோவிலின்கருவறையில்தேவி உனக்கு;தினம் தினம்என் கண்ணீரால்அபிஷேகம்! பரிட்சை அறை வெளியேமுதல் தேர்விற்கு முந்தையபதட்டமான அந்நொடிகள்! எங்கெங்கோ தேடிசலிப்படைந்தகண்கள் தரை தொட்டுஎழும்பிய சமயம்முகமெல்லாம் புன்னகையாய்நின்றிருந்தாய் எதிரில்! ‘படிச்சிட்டியா?நல்லா எழுது;வாழ்த்துக்கள்!’அவசரமாய் உதிர்ந்த வார்த்தைகள்இறக்கை விரித்து காற்றில்பறக்க தொடங்கியிருந்தன;பக்கத்தில் நானும்ஒரு காற்றாடியாய் மாறிநானும் பறந்திருந்தேன்;எனக்கே ஆச்சர்யம்தான்மேலே பேசியதெல்லாம்நான்தானா என்பதில்எனக்கே பெரும் ஆச்சரியம்தான்! உனக்கேற்பட்ட ஆச்சரியம்இன்று சொல்லியா முடியும்! உனக்கு பேசக்கூட வருமா?அதிலும் என்னிடம் என்பதாய்ஒரு பார்வைமேலாய் படரவிட்டு‘இந்தா கோவில் பிரசாதம்’கைவிரித்து நீ தரகண்மூடி தொட்டு நெற்றியில் நான் பூசகையிருந்த எழுதுகோல் தவறிமண்ணில் [...]
கவிதை,காதல்,தொடர்,பிப்ரவரி,மற்றொரு மாலையில்...