<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ப்ரியன் கவிதைகள்.</title>
	<atom:link href="http://priyanonline.com/?feed=rss2" rel="self" type="application/rss+xml" />
	<link>http://priyanonline.com</link>
	<description>சில கவிதைகளும்...கவிதைப் போன்ற பலதும்...</description>
	<lastBuildDate>Tue, 22 Jun 2010 11:43:07 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.0.1</generator>
		<item>
		<title>தொட்டு வழியும் மழைத் துளி&#8230;</title>
		<link>http://priyanonline.com/?p=508</link>
		<comments>http://priyanonline.com/?p=508#comments</comments>
		<pubDate>Tue, 22 Jun 2010 11:43:07 +0000</pubDate>
		<dc:creator>ப்ரியன்</dc:creator>
				<category><![CDATA[கவிதை]]></category>
		<category><![CDATA[காதல்]]></category>

		<guid isPermaLink="false">http://priyanonline.com/?p=508</guid>
		<description><![CDATA[அவளை தொட்டு வழியும் ஒவ்வொரு மழைத் துளியும் விழுகிறது அவளாகவே&#8230; - ப்ரியன்.]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: center;"><a href="http://priyanonline.com/wp-content/blog_imgs/Thottu_Vazhiyum_Mazhai_1.jpg"><img class="aligncenter size-full wp-image-509" title="Thottu_Vazhiyum_Mazhai_1" src="http://priyanonline.com/wp-content/blog_imgs/Thottu_Vazhiyum_Mazhai_1.jpg" alt="" width="467" height="525" /></a></p>
<p style="text-align: center;"><a href="http://priyanonline.com/wp-content/blog_imgs/Thottu_Vazhiyum_Mazhai_2.jpg"><img class="aligncenter size-full wp-image-510" title="Thottu_Vazhiyum_Mazhai_2" src="http://priyanonline.com/wp-content/blog_imgs/Thottu_Vazhiyum_Mazhai_2.jpg" alt="" width="467" height="525" /></a></p>
<div id="_mcePaste">அவளை தொட்டு வழியும்</div>
<div id="_mcePaste">ஒவ்வொரு மழைத் துளியும்</div>
<div id="_mcePaste">விழுகிறது அவளாகவே&#8230;</div>
<p>- ப்ரியன்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://priyanonline.com/?feed=rss2&amp;p=508</wfw:commentRss>
		<slash:comments>9</slash:comments>
		</item>
		<item>
		<title>விரல் மொழி&#8230;</title>
		<link>http://priyanonline.com/?p=495</link>
		<comments>http://priyanonline.com/?p=495#comments</comments>
		<pubDate>Wed, 26 May 2010 10:05:16 +0000</pubDate>
		<dc:creator>ப்ரியன்</dc:creator>
				<category><![CDATA[கவிதை]]></category>
		<category><![CDATA[காதல்]]></category>
		<category><![CDATA[பிற]]></category>

		<guid isPermaLink="false">http://priyanonline.com/?p=495</guid>
		<description><![CDATA[விழி மொழிகளையே இன்னும் மொழிபெயர்த்து முடியவில்லை அதற்குள் ஆரம்பித்துவிட்டாய் விரல் மொழி பேச! * - ப்ரியன்.]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: center;"><a href="http://priyanonline.com/wp-content/blog_imgs/Vizhi_Mozhi.jpg"><img class="aligncenter" title="Vizhi_Mozhi" src="http://priyanonline.com/wp-content/blog_imgs/Vizhi_Mozhi.jpg" alt="" width="600" height="400" /></a></p>
<p style="text-align: center;">
<p style="text-align: center;">
<p style="text-align: center;"><a href="http://priyanonline.com/wp-content/blog_imgs/Vizhi_Mozhi_2.jpg"><img class="aligncenter size-full wp-image-494" title="Vizhi_Mozhi_2" src="http://priyanonline.com/wp-content/blog_imgs/Vizhi_Mozhi_2.jpg" alt="" width="467" height="700" /></a></p>
<div>
<p><span style="color: #0000ee; -webkit-text-decorations-in-effect: underline;"><span style="color: #000000;"> </span></span></p>
<div id="_mcePaste">
<div id="_mcePaste">விழி மொழிகளையே</div>
<div id="_mcePaste">இன்னும் மொழிபெயர்த்து முடியவில்லை</div>
<div id="_mcePaste">அதற்குள் ஆரம்பித்துவிட்டாய்</div>
<div id="_mcePaste">விரல் மொழி பேச!</div>
<div id="_mcePaste">*</div>
</div>
<div>- ப்ரியன்.</div>
</div>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://priyanonline.com/?feed=rss2&amp;p=495</wfw:commentRss>
		<slash:comments>7</slash:comments>
		</item>
		<item>
		<title>இரத்த ஈழம்</title>
		<link>http://priyanonline.com/?p=491</link>
		<comments>http://priyanonline.com/?p=491#comments</comments>
		<pubDate>Tue, 18 May 2010 14:20:58 +0000</pubDate>
		<dc:creator>ப்ரியன்</dc:creator>
				<category><![CDATA[ஈழம்]]></category>

		<guid isPermaLink="false">http://priyanonline.com/?p=491</guid>
		<description><![CDATA[நாளை விடியும் விடுதலைக்கு விதையாகிய உயிர்களுக்கு வீரவணக்கங்கள்&#8230;]]></description>
			<content:encoded><![CDATA[<p><img class="aligncenter" title="Eelam" src="http://priyanonline.com/pictures/Eelam.jpg" alt="" width="460" height="300" /></p>
<p>நாளை விடியும்</p>
<p>விடுதலைக்கு விதையாகிய</p>
<p>உயிர்களுக்கு வீரவணக்கங்கள்&#8230;</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://priyanonline.com/?feed=rss2&amp;p=491</wfw:commentRss>
		<slash:comments>4</slash:comments>
		</item>
		<item>
		<title>வெட்கங்களை அள்ளி பூசிக்கொள்&#8230;</title>
		<link>http://priyanonline.com/?p=489</link>
		<comments>http://priyanonline.com/?p=489#comments</comments>
		<pubDate>Wed, 20 Jan 2010 10:39:22 +0000</pubDate>
		<dc:creator>ப்ரியன்</dc:creator>
				<category><![CDATA[கவிதை]]></category>
		<category><![CDATA[காதல்]]></category>

		<guid isPermaLink="false">http://priyanonline.com/?p=489</guid>
		<description><![CDATA[மேல் இதழ் முதல்வரி கீழ் இதழ் மறுவரி உன் இதழ்கள் எனக்கான இருவரி கவி * நீ அழகுக்கான அளவுகோல்! * கவிதைகளில் உண்மையை மட்டும் எழுதிவிடுகிறேன் உன்னழகை எழுதும் வேளைகளில். * தூண்டிவிடுவது என்னவோ உன்னழகு பழி மட்டும் என் மேல். * கைகட்டி அமர்ந்திருக்கிறாய் நல்ல பிள்ளையாய்; உன் அழகு போடுகிறது குத்தாட்டம்! * நான் கொள்ளை அடிக்க அடிக்க கொஞ்சமும் குறைவதில்லை உன்னிடம் அழகு&#8230; * உன் அழகுக்கு அழகுகூட்ட முகப்பூச்சு ஏதும் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<div id="_mcePaste">
<div id="_mcePaste">மேல் இதழ் முதல்வரி</div>
<div id="_mcePaste">கீழ் இதழ் மறுவரி</div>
<div id="_mcePaste">உன் இதழ்கள்</div>
<div id="_mcePaste">எனக்கான இருவரி கவி</div>
<div id="_mcePaste"></div>
<div id="_mcePaste">*</div>
<div id="_mcePaste"></div>
<div id="_mcePaste">நீ</div>
<div id="_mcePaste">அழகுக்கான</div>
<div id="_mcePaste">அளவுகோல்!</div>
<div id="_mcePaste"></div>
<div id="_mcePaste">*</div>
<div id="_mcePaste"></div>
<div id="_mcePaste">கவிதைகளில்</div>
<div id="_mcePaste">உண்மையை மட்டும் எழுதிவிடுகிறேன்</div>
<div id="_mcePaste">உன்னழகை எழுதும் வேளைகளில்.</div>
<div id="_mcePaste"></div>
<div id="_mcePaste">*</div>
<div id="_mcePaste"></div>
<div id="_mcePaste">தூண்டிவிடுவது என்னவோ</div>
<div id="_mcePaste">உன்னழகு</div>
<div id="_mcePaste">பழி மட்டும் என் மேல்.</div>
<div id="_mcePaste"></div>
<div id="_mcePaste">*</div>
<div id="_mcePaste"></div>
<div id="_mcePaste">கைகட்டி அமர்ந்திருக்கிறாய்</div>
<div id="_mcePaste">நல்ல பிள்ளையாய்;</div>
<div id="_mcePaste">உன் அழகு போடுகிறது</div>
<div id="_mcePaste">குத்தாட்டம்!</div>
<div id="_mcePaste"></div>
<div id="_mcePaste">*</div>
<div id="_mcePaste"></div>
<div id="_mcePaste">நான் கொள்ளை அடிக்க அடிக்க</div>
<div id="_mcePaste">கொஞ்சமும் குறைவதில்லை</div>
<div id="_mcePaste">உன்னிடம் அழகு&#8230;</div>
<div id="_mcePaste"></div>
<div id="_mcePaste">*</div>
<div id="_mcePaste"></div>
<div id="_mcePaste">உன் அழகுக்கு அழகுகூட்ட</div>
<div id="_mcePaste">முகப்பூச்சு ஏதும் வேண்டாம்</div>
<div id="_mcePaste">உன் வெட்கங்களை அள்ளி பூசிக்கொள் போதும்&#8230;</div>
<div id="_mcePaste"></div>
<div id="_mcePaste">*</div>
</div>
<div id="_mcePaste"></div>
<div>- ப்ரியன்.</div>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://priyanonline.com/?feed=rss2&amp;p=489</wfw:commentRss>
		<slash:comments>28</slash:comments>
		</item>
		<item>
		<title>கையசைத்து நகர்ந்தது இரயில்! &#8211; மீள்பதிவு</title>
		<link>http://priyanonline.com/?p=480</link>
		<comments>http://priyanonline.com/?p=480#comments</comments>
		<pubDate>Sun, 27 Sep 2009 19:00:31 +0000</pubDate>
		<dc:creator>ப்ரியன்</dc:creator>
				<category><![CDATA[கவிதை]]></category>
		<category><![CDATA[காதல்]]></category>
		<category><![CDATA[கை அசைத்து நகர்ந்தது இரயில்.]]></category>
		<category><![CDATA[தொடர்]]></category>
		<category><![CDATA[நட்சத்திரம்]]></category>

		<guid isPermaLink="false">http://priyanonline.com/?p=480</guid>
		<description><![CDATA[யப்பா!பிப்ரவரியில ஆரம்பிச்சது ஜூன் ல முடிஞ்சிருக்கு எல்லோருக்கும் (எனக்கும்) கதையே மறந்திருக்கும் என்னை மடலிலும் சாட்டிலும் கேட்டுக் கேட்டு கடைசியில் எழுத வைத்துவிட்ட அன்புடன் குழும நண்பர் ரிஷி ரிஸ்வானுக்கு என் நன்றிகள்!மன்னிக்கனும் நண்பா ரொம்பவே உங்க பொறுமையை சோதிச்சுட்டேன். மீண்டும் ??? வருகிறேன் ஒரு தொடரோடு காதல் 01 டேய்!டேய்! சூரியன் வந்து நேரமாச்சு! எந்திரிடா! அம்மா நச்சரித்துக் கொண்டிருக்கையில்! பட்டுத் தாவணி சரசரக்க வந்து நின்றாய் நிலவாக! காதல் 02 &#8220;அம்மா ஒரு குடம் குடிதண்ணி [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>யப்பா!பிப்ரவரியில ஆரம்பிச்சது ஜூன் ல முடிஞ்சிருக்கு எல்லோருக்கும் (எனக்கும்) கதையே மறந்திருக்கும் <img src='http://priyanonline.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> </p>
<p>என்னை மடலிலும் சாட்டிலும் கேட்டுக் கேட்டு கடைசியில் எழுத வைத்துவிட்ட <a href="http://groups.google.com/group/anbudan/">அன்புடன்</a> குழும நண்பர் ரிஷி ரிஸ்வானுக்கு என் நன்றிகள்!மன்னிக்கனும் நண்பா ரொம்பவே உங்க பொறுமையை சோதிச்சுட்டேன்.</p>
<p> <img src='http://priyanonline.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' />  மீண்டும் ??? வருகிறேன் ஒரு தொடரோடு <img src='http://priyanonline.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> </p>
<p><span>காதல் 01</span></p>
<p>டேய்!டேய்!<br />
சூரியன் வந்து நேரமாச்சு!<br />
எந்திரிடா!<br />
அம்மா நச்சரித்துக் கொண்டிருக்கையில்!<br />
பட்டுத் தாவணி சரசரக்க<br />
வந்து நின்றாய் நிலவாக!</p>
<p><span>காதல் 02</span></p>
<p>&#8220;அம்மா<br />
ஒரு குடம்<br />
குடிதண்ணி வேணும்!&#8221;<br />
இப்படியல்லாமா குயில் கூவும்?<br />
குழம்பி கண்ணைக் கசக்கியவன் முன்!<br />
அடடா,<br />
நேற்றைக்கு கனவில் வந்த<br />
அதே தேவதை!</p>
<p><span>காதல் 03</span></p>
<p>சத்தியமாய்,<br />
இன்றைய தேதிவரை<br />
அன்றைய நாள்தான்<br />
இனியநாள் எனக்கு!</p>
<p><span>காதல் 04</span></p>
<p>பார்க்காதப் பார்வை;<br />
இதுவரைப் பார்க்காத பார்வை<br />
நான் பார்க்க<br />
அம்மா சொன்னாள்<br />
&#8220;புதுசா குடிவந்திருக்கிறப் பொண்ணு&#8221;<br />
நான் கேட்காத கேள்வி<br />
எங்கே என் இதயத்திலா?</p>
<p><span>காதல் 05<br />
</span><br />
என் அம்மா உன் அம்மாவும்<br />
உன் அப்பா என் அப்பாவும்<br />
நல்ல நண்பர்கள் ஆனதைவிட;<br />
எனக்கு சந்தோசம்,<br />
எங்கள் வீட்டில் பூக்கும் ரோஜாவும்<br />
உந்தன் கூந்தலும் ராசி ஆனதில்தான்!</p>
<p><span>காதல் 06</span></p>
<p>எப்படி இருப்பாள்? எப்படி இருப்பாள்? -<br />
நண்பர்களின் தொடர் கேள்விக்கு<br />
எப்படி இருக்கவேண்டுமென்று<br />
கனவு கண்டேனோ<br />
அப்படி இருப்பாள் எனச்<br />
சொல்லி தப்பிவந்த நாளில்,<br />
நல்ல நல்ல கல்லூரிகளிலெல்லாம்<br />
இடம் கிடைத்தும் வேண்டாமென்று<br />
கடைசியில் நீ சேர்ந்த அதே கல்லூரியில்<br />
சேர்கிறாள் மகள் எனச் சொல்லி<br />
வருத்தப்பட்டாள் உன் அம்மா<br />
குதூகலப்பட்டது என் ஆன்மா!</p>
<p><span>காதல் 07<br />
</span><br />
எப்படி உணர்ந்தேனா?<br />
உன்னுடன் முதல்நாள்<br />
கல்லூரி வரும்போது<br />
எப்படி உணர்ந்தேனா?<br />
தெய்வத்துடன் நடந்துவர<br />
வரம் பெற்ற பக்தனைப் போல்!<br />
அடியேய்,<br />
தெய்வத்துடன் நடந்துவர<br />
வரம் பெற்ற<br />
ஏழைபக்தனைப் போல்!</p>
<p><span>காதல் 08<br />
</span><br />
நீ வந்ததிலிருந்து<br />
கல்லூரி முழுவதும்<br />
ஏகப்பட்ட மரியாதை<br />
எனக்கு!<br />
தெரியும் அது<br />
சாமியின் காலடியில் கிடக்கும்<br />
பூவுக்கான மரியாதை!</p>
<p><span>காதல் 09</span></p>
<p>நேற்றிருந்த நானாக<br />
இன்று நான் இல்லை!<br />
தனிமை துணையாய் போனது!<br />
மொட்டைமாடி இரவு<br />
கையில் புகை<br />
நண்பர்களுடன் அரட்டை! &#8211; என்றிருந்த<br />
அடையாளம்<br />
அத்தனையும் அவசரமாய் மறந்துப் போனது!<br />
உன் நினைவுகள் மட்டும் துணையாய் ஆனது!</p>
<p><span>காதல் 10</span></p>
<p>கல்லுரிச் செல்லும்<br />
காளையர்களின் கனமான<br />
கனவு இருசக்கர வாகனம்!<br />
அப்பா வாங்கித் தர<br />
அபசகுனமானது<br />
உன்னுடனான பேருந்து<br />
பயணத்திற்கு!</p>
<p><span>காதல் 11<br />
</span><br />
தனியே உனை அனுப்பவாதா? &#8211; உன் அப்பா<br />
உன்னையும் தொற்றிக் கொள்ள சொல்ல<br />
பூவானது பின் இருக்கை!</p>
<p><span>காதல் 12</span></p>
<p>தினம் தினம்<br />
அலுங்காமல் குலுங்காமல்<br />
தேரில் உலாவரும்<br />
அம்மனைப் போல்தான்<br />
அழைத்துச் செல்வேன்!<br />
நீயும் வழிதோரும் காணும்<br />
பிள்ளைகளுக்கு எல்லாம்<br />
புன்னகை வரம் அளித்துக்<br />
கொண்டே வருவாய்!<br />
இவன் மனம் மட்டும் குண்டு<br />
குழி தேடித் தேடி குதித்து<br />
தரிக் கெட்டு ஓடிவரும்!</p>
<p><span>காதல் 13</span></p>
<p>கடைசிவரை யாரென<br />
கண்டறிய இயலவில்லை<br />
நம்முடன்<br />
மிதந்து வந்த வண்டியை பொறாமையில்<br />
&#8220;பஞ்சர்&#8221; ஆக்கிய<br />
களவானி யாரென்று!</p>
<p><span>காதல் 14</span></p>
<p>பெண்ணில்லா எங்கள் வீட்டிற்கும்<br />
நீதான் கோலம் போடுவாய்!</p>
<p>போக வர பார்த்திருக்கிறேன்<br />
அர்த்தமில்லாமல் பேசிப்பேசி<br />
வழிந்து கொண்டிருக்கும்<br />
என்வீட்டு கோலம்<br />
உன்வீட்டு கோலத்திடம்!</p>
<p><span>காதல் 15</span></p>
<p>நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை<br />
புடவைக் கட்டிக்கொண்டு<br />
வந்த அந்நாளில்<br />
நிலவில் முட்டி நின்று<br />
அம்மாவிடம் வாங்கிக்<br />
கட்டிக் கொண்டதை!</p>
<p><span>காதல் 16<br />
</span><br />
காதலர் தினமன்று<br />
உனக்கு கடிதம் கொடுத்த அவனுக்கு<br />
நீ கொடுத்த பதிலடியில்<br />
சொல்லாமல் கொள்ளாமல்<br />
ஓடி ஒளிந்துக் கொண்டது<br />
என் தைரியம்<br />
தற்காலிகமாய்<br />
என் காதலும்!</p>
<p><span>காதல் 17<br />
</span><br />
அன்று உனக்காக<br />
வாங்கிய ரோஜா<br />
ஒற்றை இதழைக்கூட உதிர்க்கவில்லை இன்னமும்!</p>
<p><span>காதல் 18</span></p>
<p>ஒரு மழைநாளில்<br />
அம்மாவீற்கு முடியாமல்போக<br />
நீ செய்த உதவி கண்டு<br />
அம்மா சொன்னாள்<br />
&#8220;இவளைப் போல்<br />
ஒரு மருமகள் வேண்டும்&#8221;<br />
இவளே மருமகளாய் வேண்டும்<br />
உனக்கு!<br />
பாவமாய் வேண்டியது இதயம்!</p>
<p><span>காதல் 19<br />
</span><br />
உன்னுடன் பேசிக்கொண்டிருக்கையில்<br />
காற்றிலாடும்<br />
கலைந்த கூந்தல் ரசித்திருந்தேன்!<br />
என்னடாவென்றாய் புருவம் தூக்கி!</p>
<p>&#8220;கூந்தலில் தொங்கிக் கொண்டு<br />
ஊஞ்சல் ஆடுகிறது என் இதயம்!&#8221;</p>
<p>கேட்டவள்,கொஞ்சம் முறைத்து<br />
சடசடவென<br />
சிரிப்பூ தூவினாய்!</p>
<p>அடடா!கவிஞனே!<br />
இன்னும் சொல்லேன்!<br />
என நீ கேட்க<br />
முதன்முதலாய்<br />
வெட்கம் கற்றேன்!</p>
<p><span>காதல் 20</span></p>
<p>கவிதையாய் நான் சொன்ன காதல்<br />
உனக்குப் புறிந்ததோ?<br />
புரிந்தும் புரியாததாய் நடிக்கிறாயோ?<br />
எண்ணி மயங்கிகிடந்த நாளில்<br />
மொட்டைமாடி இரவில்<br />
&#8220;விக்கி&#8221; எனக்கொரு கவிதை வேண்டும்<br />
என் &#8216;கவி&#8217;தைக்கு இல்லா கவிதையா?<br />
சொல்ல வந்த கணம்!<br />
வெட்கபூ பூத்தபடிச் சொல்லி முடித்தாய்<br />
என் காதலனுக்கு தர&#8230;<br />
அந்நேரத்தில் மடிந்தது என் உயிர்;<br />
இன்றைக்கும்,<br />
அதோ!அங்கு வானெங்கும்<br />
நட்சத்திரங்களாய்<br />
சிதறிக் கிடப்பவை<br />
இதயம் சிதறிய சில்லுகள்!</p>
<p><span>காதல் 21<br />
</span><br />
அவளோ?இவளோ!<br />
என் காதலி என<br />
பார்வை வீச வேண்டிய வயசடி!<br />
அவனோ?இல்லை இவனோ?<br />
உன் காதலன் என<br />
நீ பேசும் ஆணிடமெல்லாம்<br />
பொறாமை பார்வை வீச வைத்தாயே<br />
கொடுமையடி கொடுமை!</p>
<p><span>காதல் 22</span></p>
<p>நல்ல கவிஞன் என்பாய்;<br />
நல்ல நண்பனென்பாய்<br />
என்னை நான் அறிய<br />
தரும் பொழுதுகளில்;</p>
<p>உன் காதலைச் சேதப்படுத்த<br />
விரும்பியதில்லையாதலால்<br />
நல்ல காதலன் எனச்<br />
சொல்லிக் கொள்வேன்<br />
என்னையே நான்!</p>
<p><span>காதல் 23</span></p>
<p>அவன் அப்படிச் சொன்னான்<br />
இப்படி சொன்னான்<br />
என காதலன் புராணம்<br />
நீ பாடி சிலாகித்திருக்க<br />
சிரித்தப்படி கேட்டுக் கொண்டிருப்பேன்<br />
மனதின்<br />
மூலையில் குத்தவைத்து<br />
அழுது கொண்டிருக்கும்<br />
என் காதல்!</p>
<p><span>காதல் 24</span></p>
<p>அறிமுகப்படுத்தியதில்லை;<br />
தூரமிருந்தும் அடையாளம்<br />
காட்டியதில்லை;<br />
உன் காதலனின்<br />
பெயரும்கூட அறிய தந்ததில்லை;<br />
ஆனாலும்<br />
உன்னை விடுத்துப் பார்த்தால்<br />
நான் மட்டுமே அறிவேன்<br />
உன் காதலனை<br />
உன்னுள் இருக்கும் காதலை;<br />
இருக்கட்டும்<br />
அவன் வரம் பெறவதற்கென்றே<br />
பிறந்த ஆடவன்;<br />
நான் சாபம் வாங்கவே<br />
வந்த முடவன்!</p>
<p><span>காதல் 25</span></p>
<p>மொட்டைமாடியில் அமர்ந்து<br />
கல்லூரி<br />
கடைசி வருடத்தின்<br />
கடைசி தேர்வுக்காக<br />
படித்துக் கொண்டிருக்கையில்;<br />
பக்கதிலிருந்த என் நோட்டு புத்தகத்தை<br />
அனுமதி இல்லாமல்<br />
எடுத்துப் பார்த்தவள்<br />
கவிதைகள் எல்லாம்<br />
உன்னைக் குறித்து இருக்க<br />
பட்டென முடி<br />
சட்டென பறந்து போனாய்;<br />
ஆற்றி முடியாமல்<br />
அழுது கொண்டே இருந்தது<br />
அம்மா நீ<br />
சொல்லாமல் போனாதாய்<br />
கவிதை!</p>
<p><span>காதல் 26</span></p>
<p>அடுத்தடுத்த நாட்கள்<br />
பேசாது நீயிருக்க<br />
ஊமையாகிப் போனது<br />
நான்!<br />
ஊனமாகிப் போனது<br />
மனது!</p>
<p><span>காதல் 27</span></p>
<p>கல்லூரி கடைசிநாளில்<br />
எல்லோரும்<br />
கலந்திருக்க<br />
பிரிவு் கவலையில்<br />
கரைந்திருக்க!<br />
என் கண்களும்<br />
அழுது கிடந்தன<br />
நீ பேசாததால்<br />
இறந்துப் போன &#8211; எந்தன்<br />
இதயத்திற்காக!</p>
<p><span>காதல் 28<br />
</span><br />
விடுமுறைக்கு ஊருக்கு பயணம்<br />
வழியனுப்ப வலிய எனை<br />
அனுப்பும் உன் அப்பா!<br />
பாதையெங்கும் மெளன<br />
முட்களுடன் பயணம்!</p>
<p>குடிக்க தண்ணீரும்<br />
படிக்க சில புத்தகங்களும்<br />
வாங்கி வந்தவனுக்கு<br />
நன்றிகூட இல்லாதா நீ!</p>
<p>கைப் பையை கூட<br />
என்னிடம் தராமால்<br />
அந்நியமாய் நீ!<br />
முதன்முதலாய்<br />
உன் அண்மை வேண்டா<br />
நிமிடங்கள் அவை!</p>
<p>மெல்ல மெல்ல<br />
இரயில் நகர ஆரம்பிக்க<br />
போ!போ!<br />
மனம் சொல்ல<br />
போய் ஏறிக் கொள்<br />
என கடைசியாய் என் மெளனமும்<br />
கலந்த வினாடியில்!</p>
<p>&#8216;உன்னை விட்டுப் போவேனோ?<br />
என் உயிரை தனியே விட்டு போவேனோ?&#8217;<br />
என நீ கட்டியணைக்க<br />
கூவி அழைத்து<br />
கையசைத்து நகர்ந்தது<br />
இரயில்!</p>
<p>நிமிர்ந்து பார்த்தவள்<br />
நீ தான்டா இத்துணை நாட்களாய்<br />
நான் சொல்லிச் சொல்லி<br />
உன்னை வெறுப்பேற்றிக் கொண்டிருந்த காதலன் என்றபடி<br />
மீண்டும் என் நெஞ்சில் முகம்புதைத்து<br />
அப்போதும் &#8216;பெயர்&#8217; சொல்லாமலே<br />
சொல்ல</p>
<p>அதிவேக ரயிலாய் பயணப்பட்டது என் மனது!</p>
<p>- ப்ரியன்.</p>
<p>மடலாடலுக்கு : <a href="http://www.blogger.com/mailtoviki@gmail.com">mailtoviki@gmail.com</a></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://priyanonline.com/?feed=rss2&amp;p=480</wfw:commentRss>
		<slash:comments>10</slash:comments>
		</item>
		<item>
		<title>காதல் கவித்தொடர் &#8211; மீள் பதிவு</title>
		<link>http://priyanonline.com/?p=484</link>
		<comments>http://priyanonline.com/?p=484#comments</comments>
		<pubDate>Sun, 27 Sep 2009 16:44:36 +0000</pubDate>
		<dc:creator>ப்ரியன்</dc:creator>
				<category><![CDATA[கவிதை]]></category>
		<category><![CDATA[காதல்]]></category>
		<category><![CDATA[காதல் கவித்தொடர்]]></category>
		<category><![CDATA[நட்சத்திரம்]]></category>

		<guid isPermaLink="false">http://priyanonline.com/?p=484</guid>
		<description><![CDATA[வணக்கம் நண்பர்களே! நன்றி! வேறுவார்த்தைகளில்லை என்னிடம்! விக்கியையும் ப்ரியாவையும் தனிமையில் விட்டு கொஞ்சமே கொஞ்சம் உங்களுடன் பேச ஆசை! அமரலாமா?நன்றி! முதலில் தன்னிலை விளக்கம் தரவேண்டிய கட்டாயத்தில் நான்!என்னை மிக நன்றாக அறிந்தவர்கள் கூட யாரவள் என வினவுகின்றனர்&#8230;தமிழ் கொண்ட வெற்றி!உண்மையில் &#8220;விக்கி&#8221;,&#8221;வித்யா&#8221;,&#8221;சின்னி&#8221;,&#8221;அம்மா&#8221;,&#8221;அப்பா&#8221; அப்புறம் &#8220;கலை&#8221; தவிர மற்றவை கற்பனையே! ம்.ப்ரியாவும்&#8230;மும்பையில் ஒரு மழைப்பகலில் வேலைவிட்ட புதிதில் இப்படி ஒருத்தி காதலியாய் கிட்டினால்?போட்ட விதை&#8230;அது ஆயிற்று ஒன்றரை வருடங்கள்&#8230;இப்போதுதான் உயிர் பிடித்திருக்கிறது!மற்றபடி பலரும் &#8220;மெயிலி&#8221; கேட்டபடி உண்மை [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>வணக்கம் நண்பர்களே!</p>
<p>நன்றி! வேறுவார்த்தைகளில்லை என்னிடம்!</p>
<p>விக்கியையும் ப்ரியாவையும் தனிமையில் விட்டு கொஞ்சமே கொஞ்சம் உங்களுடன் பேச ஆசை! அமரலாமா?நன்றி!</p>
<p>முதலில் தன்னிலை விளக்கம் தரவேண்டிய கட்டாயத்தில் நான்!என்னை மிக நன்றாக அறிந்தவர்கள் கூட யாரவள் என வினவுகின்றனர்&#8230;தமிழ் கொண்ட வெற்றி!உண்மையில் &#8220;விக்கி&#8221;,&#8221;வித்யா&#8221;,&#8221;சின்னி&#8221;,&#8221;அம்மா&#8221;,&#8221;அப்பா&#8221; அப்புறம் &#8220;கலை&#8221; தவிர மற்றவை<br />
கற்பனையே! ம்.ப்ரியாவும்&#8230;மும்பையில் ஒரு மழைப்பகலில் வேலைவிட்ட புதிதில் இப்படி ஒருத்தி காதலியாய் கிட்டினால்?போட்ட விதை&#8230;அது ஆயிற்று ஒன்றரை வருடங்கள்&#8230;இப்போதுதான் உயிர் பிடித்திருக்கிறது!மற்றபடி பலரும் &#8220;மெயிலி&#8221; கேட்டபடி உண்மை சம்பவமொன்றுமில்லை!</p>
<p>நன்றி சொல்லவேண்டிய நேரம்!உயிர் கொடுத்து வளர்க்கும் தாய்க்கும்!எல்லோரும் தம்மக்களை ஆங்கிலப்பள்ளியில் சேர்க்க! எனை தமிழ்ப்பள்ளியில் சேர்த்து உதவிய முதன் ஆசிரியன் தகப்பனுக்கும்!கன்னடம் பேசும் எனையும் ஒரு பொருட்டாய் மதித்து என்னிடம்<br />
தங்கி நிற்கும் என் தமிழுக்கும்!தப்பாய் சொல்லுகையில் திருத்தி;துவண்ட கணம் தட்டிக்கொடுக்கும் என்னினிய நண்ப நெங்சங்களுக்கும்!இவர்களுக்காவது ஏதாவது செய்திருப்பேன்&#8230;முகம் கூட தெரியாமல் &#8220;மெயிலி&#8221; உற்சாகம் கொடுத்த சில நண்ப நல்லுள்ளங்களுக்கும்!கட்டக்கடைசியாய்,ஆனால் சத்தியமாய் இதுவரை கண்ணாமூச்சிகாட்டினாலும் என்றாவது நான் கண்டுகொள்ளப் போகும் என்னருமை &#8220;ப்ரியா&#8221;விற்கும்!ஐயோ கோபிக்காதே காதலே&#8230;தமிழும் நானும் தடுமாறி பாதைதெரியாமல் முழித்த நேரமெல்லாம்&#8230;கைப்பிடித்து வழி காட்டி அழைத்து வந்த குழந்தை &#8220;காதல்&#8221; உணர்ச்சிக்கும்&#8230;</p>
<p style="text-align: center;">இது சமர்ப்பணம்!</p>
<p>சிலருக்கு பிடித்திருக்கலாம்! &#8211; மகிழ்ச்சி<br />
பலரை இம்சித்திருக்கலாம்! &#8211; மன்னிக்க!</p>
<p>மீண்டும் இம்சிக்கவோ! மகிழ்விக்கவோ!<br />
கட்டாயம் வருவேன்&#8230;இப்போதைக்கு விடைக்கொடுங்கள்!<br />
திட்டோ?பாராட்டோ?<br />
<a href="mailto:mailtoviki@gmail.com">mailtoviki@gmail.com</a> அனுப்புங்கள்!<br />
நன்றி!</p>
<p>ப்ரியமுடன்<br />
(&#8220;ப்ரியாவுடன்&#8221;னு போட வேண்டிக்கோங்க!)<br />
ப்ரியன்&#8230;</p>
<p style="text-align: center;"><strong style="font-weight: bold;">மொட்டு</strong></p>
<p>காதல் &#8211; 1</p>
<p>16.7.2001 திங்கட்கிழமை<br />
&#8220;விழியீர்ப்பு விசைகள்&#8221;<br />
வாசித்துக் கொண்டிருக்கையில்தான்<br />
நுழைந்தாய் எதிர்வீட்டுத்<br />
தோழியின் புதுத்தோழியாய்!</p>
<p>காதல் &#8211; 2</p>
<p>டேய் இது &#8220;ப்ரியா&#8221;<br />
அடுத்த வீட்டில் புதுசா<br />
குடிவந்திருக்காங்க &#8211; தோழி&#8230;</p>
<p>அறிமுகத்தில்<br />
&#8220;வணக்கம்&#8221; சொல்லி நீ<br />
கைக்குவிக்கையில்</p>
<p>எதோ உள்ளுடைந்து<br />
அலறியது;</p>
<p>இவள் இவள்<br />
இவளேதானென்று!!!</p>
<p>காதல் &#8211; 3</p>
<p>அம்மா குங்குமம்<br />
இட்டு &#8211; மகாலட்சுமியாய் இரு<br />
வாழ்த்தினார்கள்<br />
வழக்கமானதுதானென்றாலும்<br />
மருமகளை வாழ்த்தியதாய்<br />
பட்டது எனக்கு!</p>
<p>என்றும் மலரா<br />
குறிஞ்சிப் பூ!<br />
எங்கள் வீட்டு ரோஜா!!<br />
உந்தன் கூந்தலில்<br />
தங்கையின் தயவு!</p>
<p>நாய்க்குட்டியும் கூட<br />
உன் காலடியில் அடிபடாமல்<br />
சுற்ற கற்றுக்கொண்டது!</p>
<p>நான் மட்டுமே<br />
தள்ளி நின்று<br />
ரசித்தேன்!<br />
தோழியின் கேலிப்<br />
பார்வையினுடே!</p>
<p>கண்டிப்பாக அன்று<br />
திருஷ்டி கழித்திருப்பார்கள்உன் வீட்டில்!!</p>
<p>காதல் &#8211; 4</p>
<p>நீ வந்து சென்ற<br />
கணத்தில் டைரி<br />
சுமந்தன இரு கவிவரிகள்!</p>
<p>கொஞ்சம் தள்ளி<br />
நின்று ரசித்தேன்<br />
அவையிரண்டும் நீ<br />
விட்டுப் போன<br />
உன்னிரு கருவிழிகள்!</p>
<p>காதல் &#8211; 5</p>
<p>sஉனக்கு பிடித்த<br />
சுஜாதாவும் வைரமுத்துவும்<br />
என்னிடத்தில் இருந்ததில்<br />
செளகரியம்<br />
அடிக்கடி வந்துபோனாய்!</p>
<p>காதல் &#8211; 6</p>
<p>தோழியும் நானும்<br />
பேசிக் கொண்டிருக்கையில்<br />
சத்தமிடாமல் இடையில் வந்தமர்ந்தாய்!<br />
ஒரு உலகப் போர்<br />
தொடங்கியது நெஞ்சில்!</p>
<p>காதல் &#8211; 7</p>
<p>அம்மாவின் அழைப்பிற்கு<br />
தோழி நகர்ந்துவிட!</p>
<p>வானம் பார்த்தும்<br />
பூமி கண்டும்<br />
அமர்ந்திருந்த நம்மை<br />
புன்னகைத்த படியே<br />
மெதுவாய் க்டந்து<br />
கடிகாரம்!</p>
<p>மெதுவாக நீதான்<br />
அரம்பித்தாய்!<br />
&#8220;கவிதை எழுதுவிங்களாமே&#8221;<br />
&#8216;கலை&#8217; சொன்னா&#8230;</p>
<p>மேலன்னதில் ஒட்டிய<br />
நா விழ மறுத்ததில்<br />
என் புன்னகையால் கழுவப்படுவதற்காகவே<br />
அமைந்ததாய் ஆனது அந்நிமிடம்!!</p>
<p>காதல் &#8211; 8</p>
<p>அடுத்த நாளே என்<br />
பழைய கவிதைகளைத்<br />
தேடித் தேடி<br />
புதிதாய்<br />
புனைப் பெயர்<br />
எழுதித் தந்ததாய்,<br />
ஞாபகம்!</p>
<p>காதல் &#8211; 9</p>
<p>அடுத்த நாள்!<br />
கவிதைகளைக் கைசேர்த்தவள்!<br />
விமர்சனம் ஏதும் சொல்லாமல்</p>
<p>காதல் கவிதை<br />
எழுதுவீங்களா?</p>
<p>கேட்டபோது<br />
&#8216;ம்&#8217; என்ற வார்த்தை<br />
மட்டுமே துப்ப முடிந்தது!<br />
இப்போது அதை மட்டுமே<br />
எழுதி தொலைக்கிறேன்<br />
என்பதை மனதில் சுமந்துகொண்டு!</p>
<p>சிரமப்பட்டு உச்சரித்தாய்<br />
எனக்காக ஒன்று வேண்டும் நாளை!</p>
<p>&#8216;கண்டிப்பாக&#8217;<br />
என்னை அடக்கிவிட்டு<br />
உற்சாகமாய் துள்ளிக்குதித்து<br />
உரக்கச் சொன்னதுஉள்ளிருந்த கவிதை!</p>
<p>காதல் &#8211; 10</p>
<p>வெளியே போய்வந்தவன்<br />
வீட்டையேப் புரட்டிப் போட்டேன்!<br />
கவிதைக் குறிப்புகளைக்<br />
காணோமென்று!<br />
அம்மா மெதுவாகச்<br />
சொன்னாள்;<br />
நீ வந்துச் சென்றாயென்று!</p>
<p>நீ எடுத்துச் சென்றிருக்க மாட்டாய்!<br />
எனக்குத் தெரியும்!<br />
பழகிய நாய்க் குட்டியென<br />
அவைதாம் உன் பின்னால்<br />
ஓடி வந்திருக்கும்!</p>
<p>காதல் &#8211; 11</p>
<p>நன்றி கெட்டதுகள்!!<br />
காகிதம் போட்டும்<br />
மசி ஆகாரமிட்டும்<br />
வளர்த்தவனைவிட்டு!</p>
<p>நேற்று வந்தவளுடனா<br />
ஓடிவிட்டீர்?!<br />
மறுபடியும் காலெடுத்து<br />
வையும் காலொடித்து விடுகிறேன்!</p>
<p>உரக்கமாய் உலறியவனை<br />
அம்மா சிரித்தவாறே<br />
தலையில் அடித்துக் கொண்டு<br />
&#8220;வித்யா இவனுக்கு முற்றிவிட்டது&#8221;<br />
தங்கையிடம் சொல்வதாய் என்னிடம்<br />
சொல்லியவாறு நகரலானார்!</p>
<p>உள்ளே உறங்கப்போன தங்கைகூட<br />
குரலுக்கு ஒர் கணம்<br />
எட்டி சிரித்து விட்டுப் போனாள்!</p>
<p>ஆகா,இவர்களுக்கு புரிந்து விட்டது!!!</p>
<p>உனக்கும் கவிதைகளின்<br />
உலறல் புரிந்துபட வேண்டும்!!<br />
ஏக்கம் ஒருபுறம்!!</p>
<p>புரிந்துபடுமோ??பயம்<br />
ஒருபுறம்!!</p>
<p>உன் உணர்ச்சி காண<br />
கவிதை தாங்கி நின்ற ஓர்<br />
காகிதமாயிருந்திருக்கலாம்<br />
அன்று மட்டும்! &#8211; தவமொருபுறம்!!அழகான அவஸ்த்தைஇரவு முழுவதும்!!</p>
<p>காதல் &#8211; 12</p>
<p>பத்திரமாய் கைச் சேர்த்தாய்!<br />
ஆயிரம் முறை மன்னிப்புக் கோரினாய்!<br />
அற்புதமென்றாய்!<br />
யாரவளென்றாய்!<br />
பாவிகளா?இதை கூட சொல்லாமல்<br />
இந்நேரம் என்னடா செய்தீர்கள்;<br />
அவள் வீட்டில்! கடிந்து கொண்டேன்<br />
கவிதைகளிடம்!</p>
<p>ஒருவேளை உன்வாசிப்பை<br />
தாலாட்டு என உறங்கி<br />
போனதுகளோ??</p>
<p>மனம் முழுவதும்<br />
குழப்பரேகைகள்!<br />
உன் முகம் மட்டும்<br />
பாலில் துடைத்த<br />
நிலவென தெளிவு!</p>
<p>சொல்லுடா சொல்லுடா!<br />
அவள் நீதானென்று<br />
சொல்லிவிடுடா!<br />
உன் மனம் கதறிய வார்தைகள்<br />
அன்று கடைசி வரைஎனக்கு கேட்கவே இல்லை!</p>
<p>காதல் &#8211; 13</p>
<p>சில நாள்<br />
செலவில்&#8230;<br />
புனைப்பெயரின் விளக்கம்<br />
கேட்டாய்!!</p>
<p>புரியவில்லையா?<br />
என் மனம் வினவியதும்;<br />
என் பெயர்தானே??<br />
உன் மனம் முணுமுணுத்ததும்;</p>
<p>கேட்டுவிட்ட<br />
தோழியின்,அம்மாவின்<br />
நமட்டுச் சிரிப்பு!!</p>
<p>இன்னமும் கண்களில்!!</p>
<p>காதல் &#8211; 14</p>
<p>தங்கையிடம் காட்டிய<br />
புதுப்பாசம்!</p>
<p>தாயிடம் பகிர்ந்துகொண்ட<br />
புதுநேசம்!</p>
<p>அப்பாவிற்கு காட்டிக்கொடுத்திருக்கும்<br />
நான் காதலிலிருப்பதை!</p>
<p>என்னடா?ஆள் புதுசா இருக்கே?<br />
ஏதாவது காதல் கீதலா??<br />
அப்பா கேட்ட போது&#8230;</p>
<p>அது வந்துப்பா&#8230;<br />
ஒண்ணுமில்லையே!<br />
தட்டுத் தடுமாறி<br />
மழுப்புகையில்!</p>
<p>&#8220;சீக்கிரம் சொல்லிடுடா இல்லாட்டி<br />
உன் அம்மா மாதிரி<br />
ஒருத்திகிட்டே தான் கடைசிலே<br />
மாட்டிக்குவே!&#8221;</p>
<p>சொல்லிய அப்பாவிற்கும்<br />
அம்மாவிற்கும் மெலிதாய்<br />
செல்லச் சண்டை துவங்கிய கணம்;</p>
<p>எத்தோச்சையாக வந்து<br />
ஓடிப்போனதாகச் சொன்னது<br />
உன் ஓட்டத்துக்கு<br />
ஈடுகொடுக்காமல்<br />
பின்தங்கிப் போன கூந்தல் வாசனை!</p>
<p>காதல் &#8211; 15</p>
<p>&#8220;ப்ரியா&#8221;வைக் காதலிக்கிறாயா?</p>
<p>இது நண்பியின் முறை!</p>
<p>&#8220;ம்&#8221; என்றது மனம்!</p>
<p>இல்லை என இப்படியும்<br />
அப்படியும் ஆட்டும்<br />
தலை மட்டும்!</p>
<p>தெரியவில்லை குளறியது<br />
நா மட்டும்!</p>
<p>கண்டிப்பா அதுதான்!</p>
<p>அவகிட்டே சொல்லிடுட்டா??<br />
கேட்டபடியே நகர்ந்த தோழியை<br />
வேண்டாம் வேண்டாம்<br />
முணங்கியபடி துரத்தியது<br />
சத்தம் மட்டும்!!</p>
<p>முன்னேறிய துவேசியை<br />
விட்டுவிடு விட்டுவிடு<br />
பின்னுக்கு இழுத்தது உள்ளம்!</p>
<p>வரவேற்பறை வரை முன்னேறியவள்!<br />
நீயே சொல்லிவிடு<br />
நாளை!<br />
திரும்பி வந்தவளை&#8230;<br />
திட்டிக் கொண்டு<br />
எழுந்தவனுக்கு&#8230;</p>
<p>கடைசி வரைத் தெரியாது!<br />
வரவேற்பறையில் நீயும்<br />
உன் நாணமும் சம்மணமிட்டு<br />
என் தவிப்பை ரசித்துகொண்டிருந்தது!</p>
<p>காதல் &#8211; 16</p>
<p>&#8220;பரதேசி&#8221; இப்படித்தான்<br />
இதே வார்த்தைதான்<br />
உபயோகித்தாள் தோழி!</p>
<p>ஏன்டா நேற்று<br />
சொல்லவில்லை!<br />
என்றும் தவறாமல் தரும்<br />
கவிதை கூட தரவில்லை?</p>
<p>ஏன்டா?கேட்டவளிடம்<br />
பயமாயிடுத்து! &#8220;கலை&#8221;&#8230;</p>
<p>பயதைத் தூக்கி<br />
குப்பையிலே போடு! &#8211; உன்<br />
காதலைத் தூக்கி<br />
கைப்பையிலே போடு!</p>
<p>தைரியம் தானா வரும்!<br />
நானும் ப்ரியாவும்<br />
நாளை கடற்கரைப்<br />
போறோம்!</p>
<p>நீயும் வர்றே!<br />
சொல்றே!</p>
<p>மறுத்துட்டா??<br />
மறுக்க மாட்டா&#8230;நான் கியாரண்டி!</p>
<p>சொல்லிய படியே<br />
நகரும் தோழியை<br />
நான் மட்டுமல்ல<br />
நட்பும் ஒழிந்திருந்து<br />
என்னை பொறாமையாகப் பார்த்தது!</p>
<p>அவள் கொடுத்துப்போன<br />
தைரியத்தில் என்னைப் போலவே<br />
இரவெல்லாம் கண்விழித்து<br />
காத்திருந்தது என்னறை<br />
மின்விளக்கு&#8230;<br />
நாளைநான் காணப்போகும்<br />
முதல்காதல் பகலுக்காக!</p>
<p style="text-align: center;"><strong style="font-weight: bold;">பூ</strong></p>
<p>காதல் &#8211; 17</p>
<p>உயிர்க்காதல் சுமந்த<br />
பேனா துப்பிய<br />
வார்த்தைகள் காகிதத்தில்!<br />
துப்பாத பல காவியங்கள்<br />
மனதில்!<br />
மறைத்து வைத்த<br />
ஒற்றை ரோஜாவுடன்! &#8211; நான்</p>
<p>தோழியுடன்<br />
துணைக்கு நீயுமோர்<br />
ரோஜாவாய்!</p>
<p>வாருங்களேன் கால் நனைத்து<br />
திரும்புவோம்! &#8211; அழைக்கும் தோழி<br />
&#8220;இல்லை நாங்கள் வரவில்லை&#8221;<br />
எனக்கும் சேர்த்து பதில்!</p>
<p>முகம் நோக்கி என் உணர்ச்சி படித்து<br />
மண் நோக்க அலையாகும் &#8211; கண்!</p>
<p>இருவரின் படபடப்பை<br />
புதுக்கவிதையென அலை நோக்கிப்<br />
புறப்பட்டது நட்பு!</p>
<p>ஏதேதோப் பேசிக்கொண்டோம்<br />
நம் காதலை தவிர!</p>
<p>ஏதோ குருட்டு தைரியத்தில்<br />
ரோஜா எடுத்து நீட்ட இருந்தவனை<br />
ஒரு நிமிடம் திடுக்கிடவைத்தது<br />
உன் குரல்!</p>
<p>&#8220;விக்கி இதைப்பாரேன்&#8221;</p>
<p>&#8220;என்னிதயத்தில் நீ காதல் பூ<br />
நான் சூட்டிக் கொள்ளவா?<br />
இல்லை சாமிக்கு அனுப்பவா?&#8221;</p>
<p>மணலில் எழுதியிருந்தாய்!<br />
&#8220;அருமை ப்ரியா!!&#8221;<br />
சொல்ல வந்தவன்<br />
வார்த்தைத் தொண்டையில்<br />
சிக்கி விக்கித்துப் போனேன்&#8230;</p>
<p>அது என்ன வலது ஓரத்தில்<br />
மணி மணியாய் இருவார்த்தைகள்<br />
இல்லையில்லை ஒருவார்த்தை<br />
&#8220;ப்ரியாப்ரியன்&#8221; ?புரிந்த கணம்<br />
உண்மையில் புதிதாய்ப் பிறந்தேன்நான்!!</p>
<p>காதல் &#8211; 18</p>
<p>வார்த்தைகள் குண்டுகளாய்<br />
உருண்டு விளையாடின<br />
தொண்டைக்குழிகளில்!</p>
<p>நம்மை கண்டு<br />
கிண்டல் பேசி<br />
நகர்ந்தன நண்டுத்<br />
துணைகள் இரண்டு!</p>
<p>நீயென்ன புது மொழி?<br />
மெளனத்திடம் மெல்லியதாய்<br />
விசாரித்துக் கொண்டிருந்தது தமிழ்!</p>
<p>ஒருவரை ஒருவர்<br />
மாறி மாறி<br />
அவசரஅவசரமாய்<br />
தின்றுவிட முயன்றதில்<br />
துளிர்க்கும் கண்கள்!</p>
<p>இப்படித்தான் இவற்றைத்<br />
துணைக் கொண்டுதான்<br />
அமர்ந்திருந்தோம்;<br />
தோழி வந்து நம் தோள் குலுக்கும்வரை!</p>
<p>காதல் &#8211; 19</p>
<p>தோழி வாங்கிவந்த<br />
&#8220;ஐஸ்கிரீம்&#8221;<br />
உருகிப் போவது கூட<br />
தெரியாமல்<br />
ஒருவரை ஒருவர்<br />
விழுங்கி கொண்டிருந்தோம்!</p>
<p>தோழியை சாட்சியாக<br />
வைத்துக்கொண்டே!</p>
<p>&#8220;நேரமாகுது&#8230;போகலாம்&#8221; &#8211; சொல்<br />
தோழி இதழ் உதிக்கும் முன்<br />
&#8220;நாங்கள் பின் வருகிறோம்<br />
நீ போ!&#8221; சொல்லும் எனை<br />
நீங்களாப் பேசியது? &#8211; எனப்<br />
பார்த்தாய்&#8230;</p>
<p>அடி&#8230;&#8230;&#8230;..<br />
ஆளப் பாரு!<br />
மிரட்டி எழவைத்த<br />
தோழியை கோபத்தோடு<br />
பின் தொடர்கிறேன்<br />
நான்!</p>
<p>மார்பின் குருக்கே<br />
கைக் கட்டி<br />
ஓரக்கண்ணால்<br />
எனைப் பார்த்து<br />
சிரித்துக் கொண்டே<br />
தோழியுடன் சம்பாஷணை<br />
செய்தபடி நீ!</p>
<p>கொண்டுவந்த ரோஜாவை<br />
கடல்<br />
ரசிக்கவிட்டு வந்தேன்!</p>
<p>கொஞ்ச தூரம் கடந்து திரும்பி<br />
பார்த்தேன்!<br />
அதுபாட்டிற்கு யாருக்கோ<br />
வரவேற்பு<br />
தந்துகொண்டிருந்தது!</p>
<p>அட,துணைக்கு மூச்சிரைக்க<br />
ஓடிக்கொண்டிருப்பது;<br />
உன் கூந்தல்உதிர்ந்த<br />
ஒற்றை மல்லிகை!</p>
<p>காதல் &#8211; 20</p>
<p>நாளைக் காலைப்<br />
பார்க்கலாம்!</p>
<p>கையசைத்துப் போனாய்!</p>
<p>உன் வாசத்தை மட்டும்<br />
என் துணைக்குவிட்டு!</p>
<p>காதல் &#8211; 21</p>
<p>காலணி கழற்றி<br />
உள் நுழைகையில்!</p>
<p>&#8220;என்ன அய்யா முகம்<br />
தெளிவாய்ட்டு இருக்கு?&#8221;</p>
<p>கத்திவிட்டு<br />
பிடிகொடுக்காமல்<br />
ஓடிப்போனது<br />
தங்கைப் பிசாசு!</p>
<p>&#8220;அகதின் அழகு முகத்தில்<br />
தெரியும்&#8221; &#8211; பழமொழி<br />
இது கண்டிப்பாக<br />
அம்மா!</p>
<p>&#8220;என்னடா இதெல்லாம்?&#8221;<br />
அட,சின்னி!!!<br />
&#8220;சின்னி எப்போ வந்தே?&#8221;<br />
தூக்கி கரகம் ஆடினேன்&#8230;<br />
தாய்வழிப் பாட்டி&#8230;</p>
<p>என்னடா&#8230;என்ன நடக்குது?<br />
கேட்ட கணம் நிறுத்தி<br />
சின்னி மடியில்<br />
தலைச் சாய்த்து<br />
வானம் பார்த்து சொல்லியது<br />
இதுதான்!</p>
<p>&#8220;ஒரு அகல்விளக்கு<br />
இந்த இருண்ட வானத்திற்கு<br />
வெளிச்சம் தர இசைந்துள்ளது&#8230;!&#8221;</p>
<p>காதல் &#8211; 22</p>
<p>தனிமையில் நான்!<br />
வானம் ருசிக்க<br />
மொட்டை மாடி!<br />
ரோஜா மெத்தை;<br />
எனக்கே எனக்கான<br />
ஒற்றை நிலவு!<br />
நான் பெயரிட<br />
காத்திருக்கும் சில<br />
மின்மினிப் பூச்சிகள்!<br />
என் வேண்டுதல்கள் இவை!<br />
அனைத்தும் அருகே!<br />
தூக்கம் மட்டும்<br />
துரத்தித் துரத்தி எட்டா தூரத்தில்!</p>
<p>தூணை துணைக்கு கட்டி<br />
உன் வீட்டை எட்டிப்<br />
பார்க்கிறேன்!</p>
<p>ஐயோ!!<br />
யாரது உன் வீட்டு<br />
சுவரேறிக் குதிப்பது!<br />
இங்கும் அங்கும் பார்த்து<br />
அவன் நெருங்குவது உன் அறை அல்லவா!!</p>
<p>ஆ!!இது என்ன அறையிலிருந்து<br />
வெளிப்பட்டு உள்ளிழுத்து<br />
ஒற்றை முத்தம் தந்து<br />
புன்னகையினுடன் கையணைத்து<br />
வழி அனுப்புவது<br />
உண்மையில் நீதானா??</p>
<p>ஏதோ கெட்ட வார்த்தை<br />
வாய்வரை வந்து வெளித்துப்ப<br />
சக்தி அற்றவனாய் நான்!</p>
<p>வந்தவன் அடுத்து வந்தது<br />
நேரே என் மொட்டை மாடிக்கு!</p>
<p>ஏதோ எதிர்பார்த்தான் என்னிடம்<br />
ஒன்றும் பேசாமல் நான் நின்றிட!<br />
படுக்கையில் விழுந்து உறங்கிப் போனான்&#8230;<br />
இதழ் மயக்கம் போலும்!</p>
<p>இவன் யார்?இவன் என்ன உறவு..??<br />
இவனிடமா கேட்பது??இல்லையில்லை&#8230;<br />
உன்னிடம்தான் கேட்கவேண்டும்&#8230;</p>
<p>நள்ளிரவு!<br />
சுவரேறிக்குதித்து!<br />
ரோஜா முள் கிழித்தல் பொறுத்து<br />
உன் வீட்டு பப்பியிடம் கடி பட்டு<br />
உன்னறை சேர்கிறேன்!</p>
<p>அவனுக்கு காத்திருந்தது<br />
போலத்தான் காத்திருந்தாய்! &#8211; எனக்கும்<br />
அதே புன்னகை!<br />
அதே காதல்!!<br />
அதே மோகம்!!!<br />
அதே தாபம்!!!!<br />
கோபத்தோடு நான் வாய்திறவும் முன்&#8230;என் தோளில் கைவைத்துகட்டிய படி நீ பகன்றாய்&#8221;காதல்&#8221; வந்தான் கண்டாயா??</p>
<p>காதல் &#8211; 23</p>
<p>கூந்தல் சுகந்தம் சுவாசித்து<br />
வானம் பார்த்து<br />
நிலவுக்கும் உனக்கும்<br />
ஆறுவித்தியாசங்கள் கண்டறிய<br />
முயலுகையில் சிணுங்கினாய்!</p>
<p>யாராவது பார்த்தால்<br />
தப்பாகிப் போகும்!</p>
<p>யாராவது பார்ப்பதா?<br />
அடி அசடே&#8230;<br />
உலகமே நம்மைத்தான்<br />
பார்த்து கிடக்கிறது!</p>
<p>நிலவை பார்!<br />
பொறாமையில் கொஞ்சம்<br />
கருமை!</p>
<p>தென்றல்<br />
நம்மை புரளிப்<br />
பேசியதில் கொஞ்சம்<br />
உஷ்ணம்!</p>
<p>ஆரம்பித்த கணம்<br />
ஆரம்பிச்சுட்டியா?<br />
போடா போய் தூங்கு!<br />
விரட்டிவிட்டாய்!</p>
<p>திரும்புதலுக்கே காத்திருந்தது போல்<br />
விழித்து பாதியிரவில்<br />
கதைக்க ஆரம்பித்தான்!<br />
&#8220;காதல்!&#8221;</p>
<p>கேட்டுக் கொண்டே படுத்துகிடந்தேன்&#8230;<br />
உனக்கு தாலாட்டு பாடிய மீதி<br />
வரியை காட்ட ஓடி வந்தது தென்றல்!</p>
<p>கண் அயர்கையில்<br />
மெல்ல என்னுள் நுழைந்து<br />
எனைப் பார்த்து<br />
மெலிதாய் புன்னகைத்து வைத்தான்<br />
&#8220;காதல்!&#8221;</p>
<p>காதல் &#8211; 24</p>
<p>உன் மூச்சுகாற்றில்<br />
பூவிதழ் வெடிக்கும்<br />
சப்தத்தில் விடிகின்றன<br />
என் கிழக்குகள்!</p>
<p>உன் வீட்டைக் கடக்கையில்<br />
கோலச்சங்கிலியில்<br />
கட்டுண்டுத் தவிக்கின்றன<br />
என் கால்கள்!</p>
<p>&#8220;ப்ரியா ப்ரியா&#8221;<br />
என விளிக்கும்<br />
என் எல்லா<br />
&#8220;system.out.println&#8221;கள்!</p>
<p>முன்னைவிட அழகாக<br />
எழுதுகிறேன்&#8230;<br />
சொல்லும்<br />
என் கவிதைகள்!</p>
<p>இவையெல்லாம்<br />
சொல்ல ஆரம்பித்தேன்;<br />
&#8220;உளற ஆரம்பித்துவிட்டாய்<br />
நிறுத்தியாக வேண்டும்&#8221;<br />
&#8220;எப்படி&#8221; &#8211; நான்<br />
&#8220;இப்படி&#8221; என்ற படி<br />
முத்தமொன்று தந்தாய்<br />
மூர்ச்சையாகி நின்றது<br />
பேச்சும் காற்றும்!!</p>
<p>&#8220;இனி அடிக்கடி உண்மை<br />
உலறுவேன்!&#8221;</p>
<p>&#8220;உதைபடுவாய்&#8221;<br />
குட்டிச் சொன்னாய்!</p>
<p>&#8220;ஆ!வலிக்குதடி&#8221;</p>
<p>மெளனம் காத்தாய்;</p>
<p>&#8220;வலி நிறுத்த ஒர் முத்தம் தாயேன்!&#8221;<br />
பிச்சை தட்டு ஏந்தாதது ஒன்றே குறை!</p>
<p>&#8220;ஆசை தோசை&#8221;</p>
<p>நம் காதலை கேட்டுச் சிரித்து<br />
இன்னும் கேட்க;<br />
கால்வலி தணிக்க<br />
நிழலுடன் சேர்ந்து<br />
அப்படியே அமர்ந்துகொண்டது<br />
அங்கிருந்த மரம்!</p>
<p style="text-align: center;"><strong style="font-weight: bold;">காய்</strong></p>
<p>காதல் &#8211; 25</p>
<p>நேற்றுவரை<br />
என்னுயிர் வளர்த்தவள்தானே நீ!</p>
<p>முன் வராமல்<br />
பேச்சு தராமல்<br />
உயிர் சுருங்க<br />
காரணமானாய்!</p>
<p>தேடித்தேடிப் பார்த்தேன்<br />
தவிப்பே மிஞ்சியது!<br />
தக்கக் காரணம் கிட்டவில்லை!<br />
உன் தவிர்த்தலுக்கு!</p>
<p>காலை நடையில்<br />
பேச்சு தரும்<br />
உன்னப்பா கூட<br />
கண்டுகொள்வதில்லை!</p>
<p>கண்டால் செல்லக்கடி கடிப்பதாய்<br />
பலமாய் கடித்து கால்சுற்றும்<br />
உன் &#8216;பப்பி&#8217; கூட<br />
பாராமுகம் காட்டியது!</p>
<p>இன்று பேசுவாய்;<br />
நாளை விலகும்<br />
உன் கோபமேகம்;<br />
மனதிடம் சமாதானம்<br />
சொல்லித் திரிந்தேன்!</p>
<p>அழைப்பு கலையிடமிருந்து<br />
சொன்ன செல்பேசி தடவி<br />
காதில்வைத்த நொடி<br />
&#8216;ப்ரியாவுக்கு கலியாணம்<br />
முடிவு செய்திருக்கிறார்கள்&#8217;<br />
சேதி சொன்னாள்!<br />
&#8216;ப்ரியா ஒத்துகிட்டாளா?&#8217;<br />
&#8216;இது என்ன கேள்வி?&#8217;<br />
அவள் இஷ்டம்தானே எல்லாம் வீட்டில்<br />
ஈயத்தை காய்ச்சி ஊற்றியிருக்கலாம்!<br />
தோழியும் மெலிதாய் மறுமுனையில்<br />
அழுததாய் தெரிந்தது!!</p>
<p>&#8220;படீர்&#8221; ஏதோ வெடித்தது!<br />
இதயமா? &#8211; இல்லை<br />
இதயத்திலொரு எரிமலையா?<br />
இனி எதுவாயிருந்தால்தான் என்ன??</p>
<p>காதல் &#8211; 26</p>
<p>ஒன்றும் பேசாமல்<br />
செல்பேசி அணைத்து,<br />
பொய்சொல்லி<br />
பகுதி நாள்<br />
பணிவிடுப்பு பெற்று!<br />
முதன்முதலில் காதல் வரைந்த<br />
மண்ணில் முன்னங்கால்<br />
புதைத்து கடல்வெறித்து;<br />
மெளனமாய் அழுது!<br />
அவளுக்கு அது சுகமென்றால்<br />
அதுவே நடக்கட்டும்<br />
மனம் செதுக்கி!<br />
&#8220;நன்றாக இருக்கட்டும்&#8221;<br />
முடிவாய் கண்ணீர் துடைத்து!<br />
வீடுத்திரும்புகையில்<br />
மணி 9.30!</p>
<p>அழைப்பு மணி அழுத்த இடம் தராமல்<br />
கால் சப்தம் கேட்டே தாள் விலக<br />
கதவின் பின் புன்னகையுடன் நீ!<br />
உன்வீட்டார் எல்லாம்<br />
என்ன இந்நேரம் இவ்வீட்டில்?</p>
<p>என்வீடுதானா?<br />
கேள்விக்குறியுடன் நெற்றி சுருங்குகையில்<br />
&#8220;வாங்க மாப்பிள்ளை&#8221; &#8211; உன் அப்பா<br />
குரல் கேட்டு! &#8211; ஐயோ என்<br />
பின்னால் உன் அவரா?<br />
அவசரமாய் திரும்பி<br />
அட இவன் உன் அத்தைமகனல்லவா?<br />
இவன் ஊருக்கு உன்<br />
அப்பா சென்றுவந்தலிருந்தல்லவா<br />
எல்லாம் மாறியது!</p>
<p>&#8220;வாங்க&#8221; சம்பிரதமாய்<br />
அழைத்து துணிமாற்றி வர<br />
என்னறை நுழைகையில்<br />
என்னைக் கண்டசோகத்தில்<br />
சத்தமாய் ஒப்பாரி வைத்து<br />
மூக்குசிந்தி அழத்துவங்கின<br />
என் கவிதைகள்!</p>
<p style="text-align: center;"><strong style="font-weight: bold;">கனி</strong></p>
<p>காதல் &#8211; 27</p>
<p>உன்னருகில் மட்டும்<br />
இடமிருக்க தயங்கி சுவரில்<br />
சாய்ந்து நின்றபடி கவனித்தேன்!</p>
<p>&#8220;மாப்பிள்ளை எப்போ கலியாணம் வைக்கலாம்&#8221;?</p>
<p>கலியாணம் பேசும் நேரமாயிது??</p>
<p>முந்தி வந்தது உன் குரல்<br />
நாளையே கூட நல்ல நாள்!</p>
<p>&#8220;இருமா&#8221;?மாப்பிள்ளை சொல்லட்டும்&#8230;<br />
உன்னப்பா குரல்கேட்டு<br />
அத்தை மகன் நான் முகம்பார்க்க!</p>
<p>எல்லோரும் எனைப்பார்க்க&#8230;<br />
ஏதோ புரிந்தும் புரியாதவனாய்<br />
நிற்க!</p>
<p>அட பைத்தியமே உன்னைத்தான்<br />
என்றபடி தலையில் குட்டி<br />
தர தரவென தங்கை இழுத்து<br />
உன்னருகில் அமரவைத்தாள்;<br />
மெல்ல மெல்ல விடியதுவங்கியது<br />
இதுவரை இருண்டருந்த மனம்!</p>
<p>பக்கத்தில் ஒளி வடிவில்<br />
ஒளிர்ந்து கொண்டிருந்தது உன் முகம்!!</p>
<p>கலியாணம் பேசலாம் இந்நேரத்திலும்!!<br />
காதல் &#8211; 28</p>
<p>திருமண அரங்கம்.<br />
மேடையில்!மெதுவாய்<br />
உன்பக்கம் சாய்ந்து<br />
வெகுநாளாய் மனமரித்த<br />
கேள்வியை கேட்டேன்;<br />
&#8220;ஏனப்படி அன்று<br />
அதிர்ச்சி தந்தீர் எல்லோரும்?&#8221;</p>
<p>&#8220;நீதானே சொன்னாய்&#8230;<br />
எதிர்ப்பில்லாமல்<br />
சுவாரசியமாயில்லை காதல்&#8221;</p>
<p>புருவம் தூக்கி சொன்னாய்&#8230;</p>
<p>அட!எத்துணை அழகாய்<br />
காதலிக்கிறாய் நீயும்!!</p>
<p>சொன்ன சமயம்<br />
ப்ரியமான ப்ரியா<br />
பக்கத்தில்<br />
தம்பி வாழ்க்கை இனி<br />
&#8220;இனிமை 24&#215;7&#8243;<br />
கண்ணடித்து நகர்ந்தாள்<br />
தோழி!!</p>
<p>உனக்கும் சேர்த்து நான்<br />
அதிகமாய் வெட்கப் பட<br />
இடம் பொருள் பாராமல்<br />
சத்தமாய் சிரித்து தொலைத்தது<br />
&#8220;காதல்&#8221;!!</p>
<p>- சுபம் -</p>
<p>வகுப்பு நடக்கையில் ஏதாவது கிறுக்கி தருவேன்&#8230;அதை கவிதை என மதித்து படித்து&#8230;புன்னகை பதிலை தந்த என் முதல் வாசகனுக்கும்!</p>
<p>நல்லதா காப்பி அடிக்கிறாய் என உற்சாகப்படுத்திய என் நண்ப உள்ளங்களுக்கும்!</p>
<p>எவனுக்கு புரியுது?? என்று &#8220;மெயிலி&#8221; அடுத்தநாள் அவனுக்கு அனுப்பாமல் விட ஏனடா இன்று ஒன்றும் காணோம் என பதில் &#8220;மெயிலி&#8221;ய நண்பனுக்கும்!</p>
<p>இப்பிடியே போனால் சுவாரசியம் இருக்காது!பிரித்து விடு!அதுவும் பெண் துரோகம் செய்வதாய் முடி!என்ற எனதருமை நண்ப வட்டங்களுக்கும்!</p>
<p>எனக்காகவே தமிழை தத்தி தத்தி படிக்கும் சில நண்பர்களுக்கும்!</p>
<p> <img src='http://priyanonline.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' />  <img src='http://priyanonline.com/wp-includes/images/smilies/icon_wink.gif' alt=';)' class='wp-smiley' />  இப்படியே தன் மனமுணர்த்திய தோழிக்கும்!</p>
<p>&#8220;பிரிக்காதே!</p>
<p>நல்லாயிருக்கு!</p>
<p>இப்படியிருந்தால் நல்லாயிருக்கும்!</p>
<p>யப்பா ஒரு வழியா முடித்துவிட்டாய்!இனி சில நாள் நிம்மதி!&#8221;மெயில் பாக்ஸ்&#8221; நிரம்பாது!&#8221;</p>
<p>இதுவும் நண்பர்களே!!</p>
<p>சில முகமறியா நண்பர்களும்!அடக்கம்!!</p>
<p>சத்தியமாய் எனை ஆக்கியது!ஊக்கியது எல்லாம் நட்பே!<br />
என்றும் எனை நேசிக்கும் நட்பிற்கே என் நன்றிகள்!</p>
<p>கால வெள்ளத்தில்,மீண்டும் சந்திப்போம்!</p>
<p>- ப்ரியன்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://priyanonline.com/?feed=rss2&amp;p=484</wfw:commentRss>
		<slash:comments>7</slash:comments>
		</item>
		<item>
		<title>யாவரும் நலம்&#8230;</title>
		<link>http://priyanonline.com/?p=472</link>
		<comments>http://priyanonline.com/?p=472#comments</comments>
		<pubDate>Sat, 26 Sep 2009 06:58:30 +0000</pubDate>
		<dc:creator>ப்ரியன்</dc:creator>
				<category><![CDATA[ஈழம்]]></category>
		<category><![CDATA[கவிதை]]></category>
		<category><![CDATA[நட்சத்திரம்]]></category>
		<category><![CDATA[பொது]]></category>

		<guid isPermaLink="false">http://priyanonline.com/?p=472</guid>
		<description><![CDATA[* வானம் வெறித்து அமர்ந்திருந்தாள் கிழவி. ஒட்டிய வயிறும் கிழிந்த உடையுமென மண்ணள்ளி தின்றுகொண்டிருந்தது ஓர் பிள்ளை சப்பத்து சப்தம் கேட்டு நடுநடுங்கி விழுந்தான் இளையவன் தூரத்தில் எங்கோ கேட்டது இன்று கண்ணில் பட்டவளின் கதறல் மரமிருந்து இவற்றை மன குறிப்பெடுத்த புத்தனின் அன்னம் சுட்டு வீழத்தப்பட்டது உளவு குற்றம் சுமத்தி துப்பாக்கி வாசத்தோடு வந்தவர்கள் புத்தனின் காதில் ஓதினார்கள் யாவரும் நலமென்று புத்தனும் புன்னகையோடு கேட்டு தலையாட்டினான் அன்னம் திரும்பாததன் பற்றிய கேள்வி எழுப்பகூட திரணியற்று [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: center; "><img class="aligncenter size-full wp-image-473" title="Buddha" src="http://priyanonline.com/wp-content/blog_imgs/Buddha.jpg" alt="Buddha" width="434" height="434" /></p>
<p>*</p>
<p>வானம்<br />
வெறித்து அமர்ந்திருந்தாள்<br />
கிழவி.</p>
<p>ஒட்டிய வயிறும்<br />
கிழிந்த உடையுமென<br />
மண்ணள்ளி தின்றுகொண்டிருந்தது<br />
ஓர் பிள்ளை</p>
<p>சப்பத்து சப்தம்<br />
கேட்டு நடுநடுங்கி விழுந்தான்<br />
இளையவன்</p>
<p>தூரத்தில் எங்கோ<br />
கேட்டது இன்று<br />
கண்ணில் பட்டவளின்<br />
கதறல்</p>
<p>மரமிருந்து இவற்றை மன குறிப்பெடுத்த<br />
புத்தனின் அன்னம்<br />
சுட்டு வீழத்தப்பட்டது<br />
உளவு குற்றம் சுமத்தி</p>
<p>துப்பாக்கி வாசத்தோடு<br />
வந்தவர்கள் புத்தனின்<br />
காதில் ஓதினார்கள்<br />
யாவரும் நலமென்று</p>
<p>புத்தனும் புன்னகையோடு<br />
கேட்டு தலையாட்டினான்<br />
அன்னம் திரும்பாததன்<br />
பற்றிய கேள்வி எழுப்பகூட திரணியற்று</p>
<p>- ப்ரியன்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://priyanonline.com/?feed=rss2&amp;p=472</wfw:commentRss>
		<slash:comments>3</slash:comments>
		</item>
		<item>
		<title>மெலிதாக கசியும் இசை&#8230;</title>
		<link>http://priyanonline.com/?p=448</link>
		<comments>http://priyanonline.com/?p=448#comments</comments>
		<pubDate>Tue, 22 Sep 2009 16:06:43 +0000</pubDate>
		<dc:creator>ப்ரியன்</dc:creator>
				<category><![CDATA[காதல்]]></category>
		<category><![CDATA[நட்சத்திரம்]]></category>

		<guid isPermaLink="false">http://priyanonline.com/?p=448</guid>
		<description><![CDATA[நேற்று எல்லாம் நல்லபடியாகத்தான் நடந்து கொண்டிருந்தது அது நிகழும் வரை. அதே இந்தியப் பெருங்கடல்தான் , இங்கு சற்று வித்தியாசமாக அவ்வப்போது உள்வாங்கிக் கொள்ளும் , சில நேரங்களில் கடற்கரையே இல்லாமல் போகும் அளவுக்கு பொங்கிவரும்.நேற்றைக்கும் அப்படித்தான் கடல் நன்கு உள்வாங்கி இருந்தது , அறையில் அமைதியாய் உறக்கத்திற்கு தயாராகி கொண்டிருந்தவனை பலவந்தமாய் நண்பர்கள் அழைத்தார்கள் நீச்சல் குளத்திற்கு (நீச்சல் குளம் நிறைய பெண்கள் இருந்ததால் இவர்கள் ஆண்களின் எண்ணிக்கை பலம் காட்ட அழைத்திருக்கிறார்கள் என்பது எனக்கு [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>நேற்று எல்லாம் நல்லபடியாகத்தான் நடந்து கொண்டிருந்தது அது நிகழும் வரை.</p>
<p>அதே இந்தியப் பெருங்கடல்தான் , இங்கு சற்று வித்தியாசமாக அவ்வப்போது உள்வாங்கிக் கொள்ளும் , சில நேரங்களில் கடற்கரையே இல்லாமல் போகும் அளவுக்கு பொங்கிவரும்.நேற்றைக்கும் அப்படித்தான் கடல் நன்கு உள்வாங்கி இருந்தது , அறையில் அமைதியாய் உறக்கத்திற்கு தயாராகி கொண்டிருந்தவனை பலவந்தமாய் நண்பர்கள் அழைத்தார்கள் நீச்சல் குளத்திற்கு (நீச்சல் குளம் நிறைய பெண்கள் இருந்ததால் இவர்கள் ஆண்களின் எண்ணிக்கை பலம் காட்ட அழைத்திருக்கிறார்கள் என்பது எனக்கு அப்போது தெரியாது).அங்கே போனால் , கடலில் நடப்போம் வாங்கன்னு ஒருத்தன் அழைக்க எல்லோரும் சென்றோம்.</p>
<p>ஒரு 100 அடி நடக்கும் வரை எதுவும் தெரியவில்லை.கலங்கலில்லா கடல் , நீருக்கு அடியில் தெரியும் வெண்மணல் , வர்ண மீன்கள் , கடல்த் தாவரங்கள் , மூச்சுவிடும் சின்னச் சின்ன பவளப்பாறைகள் எல்லாம் இடுப்பளவு கடல் தண்ணீருக்கடியில் , இடையில் நறுக்கென ஏதோ குத்தியது போன்ற உணர்வு இறந்துபோன பவளப்பாறையாக இருக்கும் என முன்னேறிப் போனால் இப்போது வலதுகாலில் நறுக்கென குத்தியது போக அடியில் ஏதோ நகர்வதாய் தோன்றியது.பயத்துடன் தண்ணீரில் துலாவினால் , முள்ளம்பன்றி போன்ற ஒரு உயிர் அதன் மேல் கால் வைத்தப்போதுதான் இந்த நறுக்.கருப்பு வர்ணத்தில் பெரிய எலுமிச்சை அளவில் எட்டு பக்கமும் 4 அங்குல நீளத்தில் முட்களை உடலில் தாங்கியபடி அது மெதுவாக நகர்ந்துக் கொண்டிருந்தது.பதறி அடித்து , கடல் விட்டு வெளியே வந்தால் கால் முழுவதும் முட்கள்.இது விஷமில்லை ஆனாலும் முள்ளை முடிந்தவரை சீக்கிரம் எடுத்துவிடுங்கள் என்று அங்கிருந்த மீனவர் ஒருவர் சொன்னார்.ம் முள் எடுப்பதிலேயே நேற்றைய காலம் முழுதும் முடிந்தது.இனி கடலில் சுறாக்களுக்காக மட்டுமில்லை இம்மாதிரியான சின்னச் சின்ன உயிர்களுக்காகவும் இறங்கவே யோசிக்கத்தான் வேண்டும்.</p>
<p style="text-align: center; "><img class="aligncenter size-medium wp-image-458" title="Long-spined Black Sea Urchin" src="http://priyanonline.com/wp-content/blog_imgs/Long-spined-Black-Sea-Urchin-300x225.jpg" alt="Long-spined Black Sea Urchin" width="300" height="225" /></p>
<p style="text-align: center; ">Sea Urchin</p>
<p style="text-align: center; "><img class="aligncenter size-medium wp-image-459" title="sea-urchin-punctures-aqaba-781757" src="http://priyanonline.com/wp-content/blog_imgs/sea-urchin-punctures-aqaba-781757-300x225.jpg" alt="sea-urchin-punctures-aqaba-781757" width="300" height="225" /></p>
<p style="text-align: center; ">படங்கள் : கூகிள்</p>
<p style="text-align: center; "><img class="aligncenter size-medium wp-image-461" title="நண்பர்கள்" src="http://priyanonline.com/wp-content/blog_imgs/DSCF1361-Copy1-300x224.jpg" alt="நண்பர்கள்" width="300" height="224" /></p>
<p style="text-align: center;">நம்ம ஆளுங்கதான் <img src='http://priyanonline.com/wp-includes/images/smilies/icon_wink.gif' alt=';)' class='wp-smiley' /> </p>
<p>*</p>
<p><img class="aligncenter size-full wp-image-456" title="கானகம்" src="http://priyanonline.com/wp-content/blog_imgs/aspenred2.jpg" alt="கானகம்" width="410" height="400" /></p>
<p>கரு நிற பறவையின் சிறகால்<br />
அணைப்பட்ட நேற்றைய இரவின்<br />
கனவில்<br />
நீ என்னைப் பற்றிய கனவில் இருந்தாய்.</p>
<p>பெரும் வனத்தை எரிக்குமொரு<br />
சிறு தீயுடன்<br />
நீளும் பாதையொன்றில் நடந்தவனை<br />
நீ புன்னகையோடுப் பார்த்திருந்தாய்</p>
<p>தரைப் போர்த்திய சருகுகளையும்<br />
நீண்டு நிற்கும் வனவிருட்சங்களையும்<br />
கடந்து &#8211; நான்<br />
தொலைந்த சமயத்தில்<br />
பற்றி எரியத் தொடங்கியது<br />
அவ்வடர் கானகம்</p>
<p>கூர்வாளினால் கிழிப்பட்ட<br />
வலி கண்டவளாய்<br />
மாறுகிறது உன் முகம்</p>
<p>பீதியில் நடுநடுங்கி<br />
உன் விழியோரம் துளிர்த்து<br />
உதிர்ந்த ஒற்றைத்துளியின் அடர்த்தியில்<br />
சட்டென அணைந்து<br />
அடங்குகிறது பெருந்தீ</p>
<p>மென்னகையோடு நாம்<br />
அணைத்துக் கொள்ள<br />
சாம்பலான மூங்கிலிலிருந்து<br />
கசிகிறது<br />
இசை, மெலிதாக.</p>
<p>- ப்ரியன்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://priyanonline.com/?feed=rss2&amp;p=448</wfw:commentRss>
		<slash:comments>5</slash:comments>
		</item>
		<item>
		<title>எழுத ஏதும் அற்றவனாய்&#8230;</title>
		<link>http://priyanonline.com/?p=441</link>
		<comments>http://priyanonline.com/?p=441#comments</comments>
		<pubDate>Mon, 21 Sep 2009 05:43:24 +0000</pubDate>
		<dc:creator>ப்ரியன்</dc:creator>
				<category><![CDATA[கவிதை]]></category>
		<category><![CDATA[நட்சத்திரம்]]></category>

		<guid isPermaLink="false">http://priyanonline.com/?p=441</guid>
		<description><![CDATA[எழுதுவதற்கு நிறைய இருக்கிறது வழியனுப்ப வந்தவளின் கடைசிநேர கண்ணீரின் கனம் பற்றியும்; ஏதென்று கேட்க ஆளில்லாத தேசத்தில் ஜூரம் கண்ட நாட்களில் விட்டத்தை வெறித்தபடி கடத்திய தனிமை பற்றியும்; கனத்த கூரான மார் கொண்ட இவ்வூர்* பெண்களைப் பற்றியும்; இரவோடு இருளாக விழித்து நகரும் சில இரவுகள் பற்றியும்; அந்நாளில் பிரிவும் ஆற்றாமையும் கலந்து தலையணை நனைக்கும் கண்ணீர்துளிகளைப் பற்றியும்; இன்னும் முட்கம்பிக்கு இடையில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் எம் இனத்தைப் பற்றியும்; இவ்வூரின்* அழகை வறுமையை, [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><img class="aligncenter" title="ஊடல்" src="http://lh3.ggpht.com/_zh9UgdVKVYo/SrcPNEqDZXI/AAAAAAAAE10/5gkCmAk6zvc/black-love-art-intimacy.jpg" alt="" width="345" height="446" /></p>
<p>எழுதுவதற்கு நிறைய இருக்கிறது<br />
வழியனுப்ப வந்தவளின்<br />
கடைசிநேர கண்ணீரின் கனம் பற்றியும்;</p>
<p>ஏதென்று கேட்க ஆளில்லாத தேசத்தில்<br />
ஜூரம் கண்ட நாட்களில்<br />
விட்டத்தை வெறித்தபடி கடத்திய தனிமை பற்றியும்;</p>
<p>கனத்த<br />
கூரான மார் கொண்ட<br />
இவ்வூர்<span style="color: #ff0000;"><strong>*</strong></span> பெண்களைப் பற்றியும்;</p>
<p>இரவோடு இருளாக<br />
விழித்து நகரும்<br />
சில இரவுகள் பற்றியும்;</p>
<p>அந்நாளில் பிரிவும்<br />
ஆற்றாமையும் கலந்து<br />
தலையணை நனைக்கும்<br />
கண்ணீர்துளிகளைப் பற்றியும்;</p>
<p>இன்னும்<br />
முட்கம்பிக்கு இடையில்<br />
சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும்<br />
எம் இனத்தைப் பற்றியும்;</p>
<p>இவ்வூரின்<span style="color: #ff0000;"><strong>*</strong></span> அழகை<br />
வறுமையை, அரசியலை<br />
நம்மவர் இங்கு காட்டும்<br />
அக்கிரமமான ஆதிக்கத்தைப் பற்றியும்<br />
எழுதுவதற்கு நிறைய இருக்கிறது.</p>
<p>என்றாலும், சோர்வையும் , சோம்பேறித்தனத்தையும் தாண்டி எழுத ஏதும் அற்றவனாக , விருப்பம் இல்லாதவனாக இருந்த ஒரு நாளில்தான் இந்ந நட்சத்திர அழைப்பு.உண்மையை சொல்வதானால் இதை ஏற்றுக் கொள்ளக்கூடிய , எழுதலாம் என்ற ஒரு மனநிலையில் கண்டிப்பாக இல்லை.என்னத் தோன்றிதோ எது உந்தியதோ தெரியவில்லை.ஒத்துக் கொண்டிருக்கிறேன்.எதுவும் இன்னமும் எழுதவில்லை , இதுதான் எழுத வேண்டும் என்று தீர்மானிக்கவுமில்லை , ஆனாலும் தினம் ஒரு பதிவாவது இட வேண்டும் என்று உறுதி எடுத்திருக்கிறேன்.என்னை நட்சத்திரமாக்கிய &#8216;தமிழ்மண&#8217;த்திற்கு நன்றி.விட்ட இடத்திலிருந்து இந்த ஒரு வாரத்தினால் நான் மீண்டும் எழுத ஆரம்பித்தால் நிச்சயமாக அது தமிழ்மணத்தின் வெற்றிதான்.</p>
<p><span style="color: #ff0000;"><strong>* </strong></span>இவ்வூர் &#8211; தற்சமயம் பிழைப்புக்காக இருக்கும் கென்யா தேசம்,</p>
<p>&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;</p>
<p>இது மூன்றாவது முறை<br />
உரையாடலை இடையில்<br />
நீ துண்டிப்பது</p>
<p>ஊடலுக்கு நீ சொல்லும்<br />
ஆயிரம் காரணங்களையும்<br />
மொழிபெயர்க்க முடிகிறது<br />
பிரிவாற்றாமை எனும் ஒற்றைச் சொல்லாய்.</p>
<p>அமைதியாய் கழியும்<br />
இவ்விரவில் மெலிதாக காதில் விழும்<br />
அலையின் ஓசையோ<br />
சிலுசிலுக்க பொழியும்<br />
மிதமான தூறலோ<br />
என் வெக்கையை குறைக்கும் அளவுக்கு சுகந்தமானதாக இல்லை.</p>
<p>நீயும் திரும்புவாய்<br />
நானும் திரும்புவேன்<br />
நாளைய உரையாடலுக்கு<br />
இன்றைக்கு ஏதும் நிகழவில்லை என்பதாய்</p>
<p>என்றாலும் இப்போதைக்கு<br />
சாளரத்தில் அமர்ந்திருக்கிறேன்<br />
நட்சத்திரம் தொலைத்த வானத்தை வெறித்தபடி.</p>
<p>- ப்ரியன்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://priyanonline.com/?feed=rss2&amp;p=441</wfw:commentRss>
		<slash:comments>18</slash:comments>
		</item>
		<item>
		<title>உனக்கான ஆபரணங்கள்</title>
		<link>http://priyanonline.com/?p=435</link>
		<comments>http://priyanonline.com/?p=435#comments</comments>
		<pubDate>Sun, 09 Aug 2009 19:21:20 +0000</pubDate>
		<dc:creator>ப்ரியன்</dc:creator>
				<category><![CDATA[கவிதை]]></category>
		<category><![CDATA[காதல்]]></category>

		<guid isPermaLink="false">http://priyanonline.com/?p=435</guid>
		<description><![CDATA[ஓலைக்குடிசையில் இடுக்கில் ஒழுகும் மழைத்துளிகளென சில்லிடுகிறது நின் நினைவலைகள் கடந்திடும் ஒவ்வொரு சமயமும். * உனக்கான ஆபரணத்தை மழைத்துளிகளால் கோர்க்கிறது வானம். * மழையின் முதல் துளி நீ அடுத்த துளி நான் மற்றவை நம் பிள்ளைகள். * காதல் தேசத்தின் தேவதையாய் இருக்ககூடும் நிலவொளியில் நம்மை நனைத்து சென்ற மழை! * எவ்வூர் நியாயம் மழை நனைத்தால் அணைப்பதும் நான் அணைத்தால் தள்ளுதலும்! * நீ நனைய என்னை தாக்குகிறது அழகின் மின்னல்! * எழுத [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><img class="aligncenter" title="உனக்கான ஆபரணங்கள்" src="http://lh5.ggpht.com/_zh9UgdVKVYo/Sn8g0Os99hI/AAAAAAAADks/8Q17Kl-AEls/rain%202.jpg" alt="" width="469" height="391" /></p>
<p>ஓலைக்குடிசையில் இடுக்கில்<br />
ஒழுகும் மழைத்துளிகளென<br />
சில்லிடுகிறது<br />
நின் நினைவலைகள்<br />
கடந்திடும் ஒவ்வொரு சமயமும்.<br />
*<br />
உனக்கான ஆபரணத்தை<br />
மழைத்துளிகளால் கோர்க்கிறது<br />
வானம்.<br />
*<br />
மழையின்<br />
முதல் துளி நீ<br />
அடுத்த துளி நான்<br />
மற்றவை<br />
நம் பிள்ளைகள்.<br />
*<br />
காதல் தேசத்தின்<br />
தேவதையாய் இருக்ககூடும்<br />
நிலவொளியில் நம்மை<br />
நனைத்து சென்ற<br />
மழை!<br />
*<br />
எவ்வூர் நியாயம்<br />
மழை நனைத்தால்<br />
அணைப்பதும்<br />
நான் அணைத்தால்<br />
தள்ளுதலும்!<br />
*<br />
நீ நனைய<br />
என்னை தாக்குகிறது<br />
அழகின் மின்னல்!<br />
*<br />
எழுத இன்னும் இருக்கிறது<br />
உன்னைப் பற்றியும்<br />
மழைப் பற்றியும்.<br />
*<br />
என் கண்ணீரின்<br />
ஒற்றை துளியை<br />
கரைக்க இயலாமல்<br />
மண் புதைகின்றன<br />
மழைத்துளிகள்.<br />
*</p>
<p>- ப்ரியன்</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://priyanonline.com/?feed=rss2&amp;p=435</wfw:commentRss>
		<slash:comments>4</slash:comments>
		</item>
	</channel>
</rss>
