கவிஞன்_காதலன்

*ஒரு கரு மூன்று கவிதைகள் – ஒரு சிறு முயற்சி*

நான் கவிஞனாக இருந்திருந்தால்
நிலா போல் சூரிய கதிர்களை தின்று
ஒளி கொடுக்கின்றது உன் முகம் என்றிருப்பேன்!
காதலனாய் இருப்பதினால்
சூரியன் மட்டுமல்ல உன் முகமும்
தானே பிரகாசிக்கக் கூடிய
ஆற்றல் கொண்டதென என்றுரைக்கின்றேன்!

– ப்ரியன்.

சூரியக் கதிர்கள் தின்று துப்பும்
நிலா உன் முகமென்றேன்
கவிஞன் என்றார்கள்!

இல்லையில்லை,
சூரியனுக்கு அடுத்து
உன் முகமே தானே
பிரகாசிக்கக் கூடியதென்றேன்
பித்து காதலன் என்கிறார்கள்!

– ப்ரியன்.

சூரியக் கதிர்கள் தின்று துப்பும்
நிலா உன் முகமென்றேன்
கவிஞன் என்றார்கள்!

இல்லையில்லை,
சூரியனுக்கு அடுத்து
உன் முகம்,தானே
பிரகாசிக்கக் கூடியதென்றேன்;
பித்து காதலன் என்கிறார்கள்!

ம் மென வெட்கப் பூ பூத்துவிடு,
சூரியனுக்கே ஒளிப் பிச்சையிடுவது
உன் முகமென
நிரூப்பித்துக் காட்டுகின்றேன்!

– ப்ரியன்.

https://www.theloadguru.com/