ப்ரியன் கவிதைகள்

சில கவிதைகளும்…கவிதைப் போன்ற பலதும்…

என் ஆயுளின் சாவி!

பிணைந்திருக்கும்
நம் கரங்களுக்குள்
கதகதப்பாய் காதல்!

*

உன் கன்னக்குழியில்
இருக்கிறது
என் ஆயுளின் சாவி!

*

வறண்ட உதட்டை
ஈரப்படுத்துகிறாய்!
அவசரமாய்
ஆயுத்தமாகின்றன
என் இதழ்கள் முத்ததிற்கு!

*

உன் வசவுகளை விட
துயரமானது
கோபமான மெளனம்!

*

நம் தனிமையில்
உன் துப்பட்டாவை
கலைக்கும் காற்றுக்கும்
எனக்கும் என்ன உறவென்றால்
என்ன நான் சொல்வது?!

*

காத்திருத்தல் சுகம்
உனக்காக
எனும்போது!

*

வாழ்க்கையை உருட்டுகையில்
எனக்கு விழுந்த
தாயம் நீ!

*

உன் பேரழகை
அழகாய் சொல்பவையே
கவிதைகள்!

*

- ப்ரியன்.

நீ…நான்…நிழல்…

மெளனமாய் நாம்
கண்கலந்திருந்தபோது
நம்
நிழல்கள் பேசிக் கொண்ட
சங்கதி என்னவாக இருக்கும்?

*

நீ காதலிக்க
தொடங்கிய பின்
என் நிழலிலும்
வர்ணங்கள்!

*

ஒட்டி அமர்ந்தோம்
கட்டிக் கொண்டன
நிழல்கள்!

*

அடுத்த சந்திப்பிற்காக
காத்திருக்கிறோம்;
உனக்காக நானும்
நின் நிழலுக்காக
என் நிழலும்!

*

இவ்விடயத்தில்
உன்னைக்காட்டிலும்
உன் நிழல் மேல் ;
முத்தம் கேட்டால்
முகம் சுழிப்பதில்லை
என் நிழலிடம்!

*

- ப்ரியன்.

சென்னையில், நாளை (13-12-2008 - சனிக்கிழமை) தகவல் தொழில்நுட்பப் பணியாளர்களின் ஈழத்தமிழர் ஆதரவு உண்ணாநிலை போராட்டம் நடைபெறுகிறது.அனைவரும் கலந்துகொண்டு , ஆதரவு தாரீர்.

நாள்: 13-டிசம்பர்-2008, சனிக்கிழமை

நேரம்: காலை 08:00 - மாலை 06:00

இடம்: கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு அருகில்.

கரம் கோர்ப்போம், இலங்கைக்கு எதிராக ஈழத்திற்கு உறவாக

மேல் தகவலுக்கு : தகவல் தொழில்நுட்பப் பணியாளர்களின் ஈழத்தமிழர் ஆதரவு உண்ணாநிலை போராட்டம்


விளம்பரம்

சுவடு...

January 2009
M T W T F S S
« Dec    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

எண்ணுவான்...