எமக்கான மழை

நிகழப் போகிறது
மழை!
பிள்ளை வரைந்த
எளிய கோடாய்!

மின்னல்
இடியோடு
எம் மண்ணின்
வாசம் கொணரக்கூடும்
அது எம் நினைவாக!

யாரும் மழை வேண்டாவென
வேண்டி
கெடுத்திட வேண்டாம்!

எமக்காக அழ
யாருமற்ற இந்நிலத்தில்
எம்மோடு
அழுது அரற்றி
அரூபம் கொள்ளும்
அதில் கரையலாம்
கண்ணீர் துளிகள்
சில!

நின்று
நிகழட்டும் மழை!

– ப்ரியன்.
நன்றி : தை கவிதையிதழ் – 2009

தொடர்பு பதிவு : ஈழக்கவிதைகள்.

https://www.theloadguru.com/