கோடை மழையின் முதல் மழைத்துளி…

Kodai_Mazhai_Muthal_Thuli

உன் பார்வை
நெய்;
எரிகிறது என்
உயிர்தீபம்

*

உன் முத்தமீன்களை
கொத்திக் கொத்தி
கொழுத்துக்கிடக்கிறது
என் உயிர்ப்பறவை

*

நம் நிழல்கள்
கட்டிக்கொண்ட பொழுதில்
நீ சிந்திய வெட்கத்தில்
வானவில்லாக பரிணாமம் கண்டன
நம் நிழல்கள்!

*

கோடை மழையின்
முதல் மழைத்துளி
நீ
சிந்தும்
ஒற்றைப் பார்வை

*

நீ
என் உயிர் சாளரத்தின்
வெண்ணிலா

*

குளத்தில் இறங்குகிறாய்
உன் அழகு பொரிக்காக
காத்திருக்கின்றன
மீன்கள்

*

நீ
கண்டு அஞ்சியதிலிருந்து
தன் கம்பீரத்தினை
நொந்துக் கொண்டிருக்கிறான்
அய்யனார்

*

என் இதயதோட்டத்தில்
காதல் பூத்திருக்கிறது
எப்போது வருகிறாய்
பறித்து சூட!

*

நீ
தொட்டுப் பறிக்க
மொட்டவிழ்கின்றன
பூக்கள்!

*

காய்வதாகவே இல்லை
நீயும் நானும்
நனைந்த மழையின் ஈரம்!

*

– ப்ரியன்

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/