நினைவு

என் காதலியை வற்புறுத்தி கேட்டதற்கு அவள் சமைத்த கவிதை :

அவள் : படித்துவிட்டு சிரிக்க கூடாது!

நான் : கண்டிப்பாக சிரிப்பேன்.

அவள் : ம்ம்ம் போடா…காட்டமாட்டேன்…

நான் : காட்ட வேண்டாம் கொஞ்சம் திரும்பு…உன் நெஞ்சிலிருந்து நானே படித்துக்கொள்கிறேன்…

அவள் : முடியாது (சொல்லியபடி திரும்ப நான் படித்த அவள் வரைந்த கவிதை)

என்னை நினைத்து
ஒரு கவிதை
எழுது என்றான்…
அவன் நினைவே
ஒரு கவிதை
என்பதறியாமல்!

நான் : டேய்…நல்ல வந்திருக்கு

அவள் : பொய்…எனக்காக பொய் சொல்ல வேண்டாம்

நான் : பொய்தான்…அழகிடம் வெட்கத்தால் இன்னமும் அழகூட்ட பொய் சொல்லலாம்

அவள் : பொறுக்கி…

நான் : ஆமாம் நான் பொறுக்கி…பொறுக்கி…கிடைத்த தெய்வம் நீ

அய்யோ தாங்கலே!
கொஞ்சம் நிறுத்தேண்டா
கத்திக் கொண்டு ஓடுகிறது காதல்…

முடிந்தால் யாரவது
காதலை தடுத்து நிறுத்தி
என்னிடம் ஒப்படையுங்களேன்
இவள் அழகிடம்
என்னை சிறைபடுத்தியதற்கு
இன்னும் இப்படி பேசிப் பேசி
பல தண்டனைகள்
தரவேண்டும் காதலுக்கு!

– ப்ரியன்.

Reader Comments

  1. துடிப்புகள்

    ‘ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே!’

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/