நீ…நான்…நிழல்…

மெளனமாய் நாம்
கண்கலந்திருந்தபோது
நம்
நிழல்கள் பேசிக் கொண்ட
சங்கதி என்னவாக இருக்கும்?

*

நீ காதலிக்க
தொடங்கிய பின்
என் நிழலிலும்
வர்ணங்கள்!

*

ஒட்டி அமர்ந்தோம்
கட்டிக் கொண்டன
நிழல்கள்!

*

அடுத்த சந்திப்பிற்காக
காத்திருக்கிறோம்;
உனக்காக நானும்
நின் நிழலுக்காக
என் நிழலும்!

*

இவ்விடயத்தில்
உன்னைக்காட்டிலும்
உன் நிழல் மேல் ;
முத்தம் கேட்டால்
முகம் சுழிப்பதில்லை
என் நிழலிடம்!

*

– ப்ரியன்.

Reader Comments

  1. Cute Devil

    உங்கள் கவிதைகள் எனக்கு ரொம்ப பிடிச்சது

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/