எமக்கான மழை

நிகழப் போகிறது
மழை!
பிள்ளை வரைந்த
எளிய கோடாய்!

மின்னல்
இடியோடு
எம் மண்ணின்
வாசம் கொணரக்கூடும்
அது எம் நினைவாக!

யாரும் மழை வேண்டாவென
வேண்டி
கெடுத்திட வேண்டாம்!

எமக்காக அழ
யாருமற்ற இந்நிலத்தில்
எம்மோடு
அழுது அரற்றி
அரூபம் கொள்ளும்
அதில் கரையலாம்
கண்ணீர் துளிகள்
சில!

நின்று
நிகழட்டும் மழை!

– ப்ரியன்.
நன்றி : தை கவிதையிதழ் – 2009

தொடர்பு பதிவு : ஈழக்கவிதைகள்.

Reader Comments

  1. ஷீ-நிசி

    மழையது மண்ணில் விழுந்தது…
    மழைக்கான இக்கவிதை என் மனதில் நிறைந்தது!

    வாழ்த்துக்கள் தோழரே!

  2. shanthy

    //எமக்காக அழ
    யாருமற்ற இந்நிலத்தில்
    எம்மோடு
    அழுது அரற்றி
    அரூபம் கொள்ளும்
    அதில் கரையலாம்//

    மழையில் கரைந்து மாரியில் நனைந்த காலம் போய் துயரில் கரையும் நிலை.

    கவிதைக்குப் பாராட்டுக்கள்.

    சாந்தி

  3. Cute Devil

    எமக்காக அழ
    யாருமற்ற இந்நிலத்தில்
    எம்மோடு
    அழுது அரற்றி
    அரூபம் கொள்ளும்
    அதில் கரையலாம்
    கண்ணீர் துளிகள்
    சில!
    *********************
    Nice

  4. Uzhavan

    மிகவும் அருமை. வாழ்த்துக்கள் !

    தமிழ்மணம் விருதுக்கான வாக்கெடுப்பில், என் படைப்புக்கள் தங்களுக்குப் பிடித்திருந்தால் வாக்களிக்குமாறு வேண்டுகிறேன்.

    கவிதை : ” கரிசக்காட்டுப் பொண்ணு”

    சினிமா விமர்சனம் : விஜயின் “குருவி” படக் கதை – சிரிப்ப அடக்கிகிட்டு படிங்க

    karisak kaattu ponnu .. Sl No: 41

    http://tamiluzhavan.blogspot.com/2008/11/blog-post_13.html

    Video: kozhi thinnum pasu .. Sl No: 18

    http://tamizhodu.blogspot.com/2008/05/blog-post.html

    kuruvi .. Sl No: 46

    http://tamizhodu.blogspot.com/2008/04/blog-post_1936.html

    நன்றியுடன்..
    உழவன்

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/