சென்னை புத்தக கண்காட்சி – 2009

சென்னைக்கு வந்து முழுதாய் 4 வருடங்கள் ஆகிவிட்டது , அதில் இது 4 வது புத்தக கண்காட்சி.கண்டதை தின்பவன் குண்டாவான் என்பதை யாரோ எனக்கு கண்டதை படிப்பவன் என்று சிறு வயதில் எனக்கு மாற்றி சொல்லி தொலைத்திருக்க வேண்டும் , அதனாலோ என்னவோ புத்தக கண்காட்சி எனக்கு திருவிழா காணும் குழந்தையின் குதூகலத்தை எனக்கு தந்திருந்தது.அம்மை கண்டு படுக்கையில் இருந்தாலும் ப்ரேமின் குறுந்தகவல் கண்டதும் ஞாயிறு (11.01.09) புத்தக கண்காட்சிக்கு முடிவு செய்திருந்தேன்.ஆனாலும் வண்டியில் இருக்கும் பெட்ரோல் புத்தக கண்காட்சி வரைக்கும் தாங்குமா என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது.நல்லவேளை எண்ணெய் நிறுவனங்களின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்து , பெட்ரோலும் கிடைத்தது.

* சென்ற முறையை விட இந்த முறை ஏற்பாடுகளும் , அரங்க அமைப்பு முறைகளும் நன்றாக இருந்தன.

* வழக்கம் போல் , கேன்டீன்லும் ஆன்மீக , சமையல் புத்தகங்கள் பக்கமும் கூட்டம் கலை கட்டுகிறது.

* கவிதை புத்தகங்கள் பக்கம் அதிக கூட்டம் காணவில்லை.ஆசிப் தலைமையில் கவுஜ கூட்டம் சீக்கிரம் கூடி அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி விவாதித்தல் நலம்.

* சுஜாதா இன்னமும் நன்றாக விலை போகிறார்.

* உயிர்மையில் 0 டிகிரி யை பார்த்துவிட்டு பையின் கணம் அறிந்து வாங்காமல் விட்டேன் , பாலபாரதி அழைத்து சென்று ஜியே வில் அதே புத்தகத்தின் மக்கள் பதிப்பை 30 ரூபாய்க்கு வாங்கி தந்தார்.(ரூ.120 மிச்சம்).

* காவல்துறையிடமிருந்து,தடை செய்யப்பட்ட இயக்கங்கள் பற்றிய புத்தகங்களை சென்னை புத்தகக் கண்காட்சி அரங்குகளில் விற்பனை செய்யக்கூடாது என்று வாய்மொழி உத்தரவாம் – வாழ்க ஜனநாயகம்.

* அரங்கிலும் , வெளி பந்தலிலும் அவ்வளவு கூட்டமில்லை , பொருளாதார மந்த நிலையா பெட்ரோல் தட்டுபாடா தெரியவில்லை.

* அரங்கிலும் புது புத்தகங்களின் வரவு குறைவே.

* புத்தக கண்காட்சில் , ரேடியோ மிர்ச்சிக்கு என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை.

* ப்ரேம் , அகிலன் , கார்த்திக் , திரு , பாலபாரதி , லட்சுமி , எழில்பாரதி , விழியன் , சாகாரா தென்றல் ஆகியோரை சந்திக்க முடிந்தது.

* சத்யத்தின் தாக்கத்தால் பர்ஸ் கொஞ்சம் இறுக்கி வைக்கபட்டதால் அதிகம் வாங்கவில்லை ,

0 டிகிரி
ஒரு இரவில் 21சென்டிமீட்டர் மழை பெய்தது
நடந்தாய்; வாழி, காவேரி

மட்டுமே வாங்கியவை.

* 50 மிலி காபி யின் விலை ரூ.10 , அதுவும் மண் மாதிரி நான் கேன்டீனில் குடித்துவிட்டு எழிலுக்கும் மதுவுக்கும் வாங்கி சென்றேன்.எழிலும் மதுவும் குடித்து பார்த்துவிட்டு , தெரிந்தே ஏன் வாங்கினீங்க என்று கேட்டார்கள்.ப்ரேம் ஏன் காபி நல்லாதானே இருக்கு என்றான்.பாவம் ப்ரேம்!?

Reader Comments

  1. மதுமிதா

    இதுக்கு மட்டும் சரியா வந்துடுவீங்களே….

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/