கண்ணீரின் மழை…

மண் நான்

மழை நீ

வா,

பொழிந்துவிட்டுப் போ!

*

நீ

என் கண்ணீரின்

மழை!

*

நீ

கண்ணீரின்

கனமானவள்;

மழையின்

அழகானவள்!

*

நீ

நனைய நனைய

குடையாகிறது

மழை!

*

நனைந்திருந்து திரும்பும்

உன்னில்

திட்டு திட்டாய்

வானம்!

*

மார்போடு சேர்த்தணைத்த

அந்நாளில்

உலகெல்லாம்

ஒரே மழையாக இருந்தது!

*

வானம்

உன் மேல் எழுதும்

கவிதைக்கு

மையாகிறது மழை!

*

நீ சாய்ந்துக் கொள்ள

சிலிர்ப்பில்

துளி துளியாய்

வானம் உதிர்கிறது

மழை நனைந்த மரம்!

*

வா,

நனைவோம்

கரைவோம்

மீண்டு

மழையோடு மழையாக

பொழிவோம்!

*

நீ

நனைய

மழை குளிக்கிறது

உன்னழகில்!

*

நீ

எவ்வளவு நனைந்தாலும்

கரையா

சர்க்கரைக்கட்டி!

*

நீ நனைய

என்னில்

காமக் காய்ச்சல்!

*

நனைந்தாலும்

உரசலில் பற்றிக் கொள்ளவே செய்கிறது

உடல் தீக்குச்சிகள்!

*

– ப்ரியன்.

Reader Comments

  1. sikkimukkikokkan

    ///நீ

    எவ்வளவு நனைந்தாலும்

    கரையா

    சர்க்கரைக்கட்டி!///

    nanru.

  2. b.rajaram

    உங்களுக்கு விருது வழங்கும் தகுதி என்னிடம் இல்லை.ஆனால்,உங்கள் எழுத்தை நேசித்த பிரியத்தை காட்ட வேறு வழியும் தெரியவில்லை எனக்கு.நேரம் வாய்க்கிற போது,வீடு வாருங்கள்.நிறைய அன்பும் நன்றியும்!

  3. ஏழிசை யாழினி

    நனைந்தாலும்
    உரசலில் பற்றிக் கொள்ளவே செய்கிறது
    உடல் தீக்குச்சிகள்!

    கவீதை நன்றாக இருக்கிறது .கடைசி வரிகள் பிடித்த வரிகள் .வாழ்த்துக்கள் …..ப்ரியன் ,,,,,,,

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/