பெரு விருட்சமாய்

என்
வாழ்வில் பெருவிருட்சமாய்
எழுந்து நிற்கிறாய் நீ;
தினம் தினம்
பூத்து பூத்து
கால் வேர்களைப்
பூஜித்தப்படி நான்!

*

உனை திட்டிவிடும்
கணங்களில் – உன்
விழியோரம் சேரும்
இரு துளிகளின்
வெப்பத்தில்
எரிந்துவிட துணிகிறேன் நான்!

*

எதையெதையோ
கவிதையாக்கும் எனக்கு
உன்னின் வெட்கத்தை
ஒரு எழுத்தாகக்கூட ஆக்கும்
அறிவு எட்டவில்லை இன்னமும்!

*

இப்போதுதான் அவிழ்ந்த மலராய்
எப்போதும் முகம் வைக்க
எப்படி இயலுகிறது உன்னால்?
முடிந்தால்
அந்த இரகசியத்தை கொஞ்சம்
என் வீட்டுத்தோட்ட மலர்களுக்கும்
சொல்லித் தாயேன்!

*

எனை பூவாக்கி சூடிக்கொள்ளேன்
புதுமலராய் பூத்திருப்பேன்
எப்போதும்!
உந்தன் வாசத்தில் – வசத்தில்!

*

கடற்கரையிலிருந்து நாம்
எழுந்து வந்துவிட்டாலும்
அங்கேயே அருகருகில் அமர்ந்து
பேசிக்கொண்டே இருக்கின்றன
மண்ணில் அமர்ந்துவிட்டு வந்த
நம் தடங்கள்!

– ப்ரியன்.

Reader Comments

  1. Anonymous

    Unnin vetkathai oru eluthaga koda aakum arivu etta villai.

    Ungal kathali adikadi vetka poo poopara priyan ? 🙂

    Neengalum athai adikadi rasipeergal enru nenaikiren 🙂

    Ungalin Rasigai 🙂

  2. அருட்பெருங்கோ

    எல்லாக் கவிதையும் அருமை ப்ரியன்.

    எனக்கு மிகவும் பிடித்தது:

    /உனை திட்டிவிடும்
    கணங்களில் – உன்
    விழியோரம் சேரும்
    இரு துளிகளின்
    வெப்பத்தில்
    எரிந்துவிட துணிகிறேன் நான்!
    /

  3. ப்ரியன்

    /*கவிதை அருமை. */

    நன்றி ‘கவி’தா 😉

    /*ப்ரியன்..அப்புறம் ஏன் திட்டறீங்க.. !*/

    திட்டினதுனாலேதானே இந்த கவிதை கிடைச்சது 😉

  4. ப்ரியன்

    ஆரு விளையாட்டுக்கு வரேன் குமரன் ஏற்கனவே வெற்றியும் நவீனும் அழைத்திருக்கிறார்கள் நாளைக்கு வந்துவிடுகிறேன் 🙂

  5. ப்ரியன்

    > ரொம்ப ரசிச்சு படிச்சேன்‍ விக்கி… நல்லாருக்கு
    நன்றி திரு!

    > (பெரு விருட்சமா?? அண்ணி கொஞ்சம் குண்டா இருப்பாங்களோ?)
    கண்டிப்பா 🙂 இல்லே 🙂

    என்
    வாழ்வில் பெரு விருட்சமாய்

    என்பதன் அர்த்தம்

    என் வாழ்வில் பெரிய பொருளாய் என்பதாய் தானே எடுக்கணும் 🙂

    > இங்க ஒரு ‘ப்’ ப போட்டு,
    நன்றி திரு ப்ளாகில் திருத்திவிட்டேன் பாருங்க 🙂

    > (அவிந்த மலரா? மலர் என்ன இட்லியா மச்சி…, அவிழ்ந்த மலர் தானே?)
    அவிழ்ந்த மலர்தான் 🙂 அவசரமாய் தட்டச்சுகையில் நிகழும் தவறு இது நீங்கள் சொல்லும் முன்னமே ப்ளாகில் திருத்திவிட்டேன் அருள் சொல்லி

    > ( கலக்கல்ஸ் விக்கி)
    நன்றி திரு!

  6. ப்ரியன்

    நன்றி அருள் கருத்துக்களுக்கும் தனிமடலில் எழுத்துப் பிழைகளை சுட்டிக் காட்டியமைக்கும்

  7. கவிதா|Kavitha

    //உனை திட்டிவிடும்
    கணங்களில் – உன்
    விழியோரம் சேரும்
    இரு துளிகளின்
    வெப்பத்தில்
    எரிந்துவிட துணிகிறேன் நான்!//

    ப்ரியன்..அப்புறம் ஏன் திட்டறீங்க.. !

    கவிதை அருமை.

  8. தம்பி

    \\இப்போதுதான் அவிழ்ந்த மலராய்
    எப்போதும் முகம் வைக்க
    எப்படி இயலுகிறது உன்னால்?\\

    இயல்பான வரிகள். கலக்குங்க ப்ரியன்

    அன்புடன்
    தம்பி

  9. திருமால்

    ரொம்ப ரசிச்சு படிச்சேன்‍ விக்கி… நல்லாருக்கு

    என்
    வாழ்வில் பெருவிருட்சமாய்
    எழுந்து நிற்கிறாய் நீ;
    (பெரு விருட்சமா?? அண்ணி கொஞ்சம் குண்டா இருப்பாங்களோ?)
    தினம் தினம்
    பூத்து பூத்து ( இங்க ஒரு ‘ப்’ ப போட்டு,
    கால் வேர்களைப்
    பூஜித்தப்படி நான்!( இந்த ‘ப்’ ப தூக்கிடலாமே?)‌

    *இப்போதுதான் அவிந்த மலராய்
    (அவிந்த மலரா? மலர் என்ன இட்லியா மச்சி…, அவிழ்ந்த மலர் தானே?)
    *கடற்கரையிலிருந்து நாம்
    எழுந்து வந்துவிட்டாலும்
    அங்கேயே அருகருகில் அமர்ந்து
    பேசிக்கொண்டே இருக்கின்றன
    மண்ணில் அமர்ந்துவிட்டு வந்த
    நம் தடங்கள்! ( கலக்கல்ஸ் விக்கி)

  10. S. அருள் குமார்

    //அங்கேயே அருகருகில் அமர்ந்து
    பேசிக்கொண்டே இருக்கின்றன
    மண்ணில் அமர்ந்துவிட்டு வந்த
    நம் தடங்கள்!
    //கற்பனை செய்து, கற்பனை செய்து மகிழத்தக்க வரிகள்! ரொம்ப நல்லா இருக்குங்க இந்த கற்பனை 🙂

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/