அய்யனார்

கவிதையை பெரியதாக்கி படிக்க படத்தின் மேல் சொடுக்குக

அய்யனார்

சென்ற வருட வறட்சிக்கே
ஊர் காலியானது தெரியாமல்
இன்னும்,
காவல் காத்துக் கொண்டிருக்கிறார்
ஊர் எல்லையில் அய்யனார்

– ப்ரியன்.

இன்னுமொரு அய்யனார் கவிதை சுட்டி :
ஒன்னுமில்லை: எல்லாரும் அய்யனாருதான்

Reader Comments

  1. சிவாஜி

    நாலே வரியில்
    நாலு பேர
    அழ வைக்கனும்னா
    அது உங்களால் தான் முடியும் பிரியன்.

  2. நிர்மல்

    ப்ரியன் என் வலைப்பக்கத்திற்கு link கொடுத்தற்கு நன்றி

  3. யாழ்_அகத்தியன்

    வணக்கம் பிரியன்
    //வறட்சியில் வயிறோடு
    ஊரும் காலியாக
    படையலுக்கு ஏங்கி
    பாவம் அய்யனார்
    ஊர்க்கோடியில்//

    நல்ல கவிதை

    http://kandeepan30.blogspot.com/

  4. ப்ரியன்

    /*ம்ம்ம்…
    வலியுணர்த்தும் கவிதை!!!*/

    நன்றி அருட்பொருங்கோ

    /*(ப்ரியன் உங்களுக்கு காதல் மட்டும் தான் வரும்னு நெனச்சிட்டேன்… ) */

    🙂

  5. ப்ரியன்

    /*யோவ், யாரையா இந்த அனானிமசு?

    kudos to you!*/

    நானும் அதையேத்தான் கேட்கிறேன் வணக்கத்துடன் அண்ணாத்தே

  6. ப்ரியன்

    சுட்டி தந்தமைக்கு நன்றி பாலா ; நல்ல கவிதை ரசித்தேன்

  7. ப்ரியன்

    /*”ஊர்”-ஐக் காலி செய்து.. படித்துப் பாருங்கள்…
    :)*/

    யாரு காலியாயிட்டாங்கன்னு சொல்லுறீங்க தலை

  8. ப்ரியன்

    கருத்துக்களுக்கு நன்றி இளா & தம்பி , துபாய் ராஜா

  9. ப்ரியன்

    /*வறட்சியில் வயிறோடு
    ஊரும் காலியாக
    படையலுக்கு ஏங்கி
    பாவம் அய்யனார்
    ஊர்க்கோடியில்*/

    நல்ல வரிகள் அனானி

  10. ப்ரியன்

    கருத்துக்களுக்கு நன்றி யாழ் அகத்தியன் & வீரமணி

  11. கார்த்திக் பிரபு

    nalla kavidhia priyan ..nan indha kavidhiagali en nabrgaluku anuppi punniyanum thedi kondane..indha madri kavihdiagali nan ungalidam adhigam edirprkirane..

  12. அருட்பெருங்கோ

    ம்ம்ம்…

    வலியுணர்த்தும் கவிதை!!!

    ( ப்ரியன் உங்களுக்கு காதல் மட்டும் தான் வரும்னு நெனச்சிட்டேன்… )

  13. வணக்கத்துடன்

    //வறட்சியில் வயிறோடு
    ஊரும் காலியாக
    படையலுக்கு ஏங்கி
    பாவம் அய்யனார்
    ஊர்க்கோடியில்//

    யோவ், யாரையா இந்த அனானிமசு?

    kudos to you!

  14. ♠ யெஸ்.பாலபாரதி ♠

    //சென்ற வருட வறட்சிக்கே
    ஊர் காலியானது தெரியாமல்
    இன்னும்,
    காவல் காத்துக் கொண்டிருக்கிறார்
    எல்லையில் அய்யனார்//

    “ஊர்”-ஐக் காலி செய்து.. படித்துப் பாருங்கள்…
    🙂

  15. (துபாய்) ராஜா

    //சென்ற வருட வறட்சிக்கே
    ஊர் காலியானது தெரியாமல்
    இன்னும்,
    காவல் காத்துக் கொண்டிருக்கிறார்
    ஊர் எல்லையில் அய்யனார்//

    விவசாயியின் வலியான வாழ்க்கையை உணர்த்தும் அருமையான கவிதை.
    வாழ்த்துக்கள் ப்ரியன்.

  16. ILA(a)இளா

    மூர்த்தி சிறிசுன்னாலும் கீர்த்து பெரிசுங்கிற மாதிரி, நாலு வரியில நச்சுன்னு சொல்லி இருக்கீங்க.

  17. Anonymous

    வறட்சியில் வயிறோடு
    ஊரும் காலியாக
    படையலுக்கு ஏங்கி
    பாவம் அய்யனார்
    ஊர்க்கோடியில்

  18. வீரமணி

    வணக்கம் பிரியன்…நல்ல கவிதை
    வீரமணி

  19. yal_ahathian

    mm- priyan -nallave -irukerathu

    rasa- un- kavithai

    thudarunkal- unka -kavithaikai- kathirugum -koodi -kankalil- en -2- kankalum- kathirukerathu- nanryudan- yal_akathian

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/